சபாநாயகருக்கு மக்கள் பால்அபிஷேகம் செய்தனர். தெலுங்கானா மாநில சட்டசபையில் சபாநாயகராகஇருப்பவர் ஸ்ரீ கொண்ட மதுசூதன சாரி .இவரது தொகுதியான புபால்பாலி மாவட்டத்தில் புதிய கிராம சபை திட்டத்தை அறிவித்தார். இதனையடுத்து மகிழ்ச்சியடைந்த அவருடைய ஆதரவாளர்கள் சினிமா நடிகர்களின் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதை போன்று சபாநாயகருக்கு் பால் அபிஷேகம் செய்தனர்.
இதனை தடுக்க வேண்டிய சபாநாயகரோ மக்கள் கொடுக்கும் மரியாதையை ஏற்கும் விதமாக பாலாபிஷே கத்தை ஏற்றுக்கொண்டார். இது குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வெளியானதை அடுத்து பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் வரத்துவங்கி உள்ளது.
Post a Comment