நாட்டின் பிரஜைகளுக்கு காணி உரிமையை வழங்குவதற்காக தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.குருநாகல் - கொட்டவெஹர பிரதேசத்தில் யொவுன் செத்கம மாதிரிக் கிராமத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
காணி உரிமை, ஒரு மனித உரிமையாகும. இது நாட்டில் அமைக்கப்படும் 605வது எழுச்சிக் கிராமமாகும். இது 25 வீடுகளைக் கொண்ட கிராமமாகும். தற்போதைய அரசாங்கம் மக்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
Post a Comment