யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க எந்தவொரு சர்வதேச நீதிமன்றத்தினையாவது அமைக்குமாறு தான் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக வட மாகாண சபை முதலமைச்சர் சி.வீ. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களுக்கு இறைமையைப் பெற்றுக் கொடுக்கவும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் தமிழ் மக்களின் காணிகளை பலவந்தமாக வைத்திருப்பதாகவும், அவற்றை அடுத்த வருடத்தில் மீட்டெடுத்து, இந்த நினைவேந்தல் நிகழ்வை அடுத்த வருடத்தில் பெரியளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment