சுழிபுரம் மாணவி றெஜீனா கயிறு இறுக்கி மூச்சிறுக்கியதாலே உயிரிழந்தார் என்று உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் உடல் சற்றுமுன்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது 6) கிணற்றிலிருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் சிறுமியின் உடற்கூற்றுப் பரிசோதனைகள் இன்று நடைபெற்றது.
“சிறுமியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதால் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார். அவர் பாலியல் ரீதியாகத் துர்நடத்தைக்கு உட்படுத்தப்படவில்லை” என்று உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment