இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியொன்றை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படடுள்ளது.இந்தப்போட்டியில் சிங்கப்பூர், மலேசியா, மற்றும் மாலைதீவு அணிகள் இதில் பங்கேற்கவுள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டீ சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் லித்துவேனியா அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டி அடுத்த மாதம் ஆரம்பப் பகுதியில் கொழும்பில் இடம்பெறும். அதன் பின்னர் ஜப்பான் அணியுடனான ஒரு போட்டியில் இலங்கை அணி ஜப்பானில் மோதவுள்ளது. இந்த வருடம் இலங்கை உதைபந்தாட்ட அணி மேலும் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக திரு.அனுர டீ சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment