
இந்த “பொல் பொட் ” கள் தனக்கு மாத்திரமல்லாது ராஜபக்ஷ குடும்பத்தையே இகழ்ந்து வருகின்றனர். அத்துடன், எமக்கு எதிராக அபாண்டங்களைச் சுமத்தி வருகின்றனர். ஆட்சிக்கு வந்த நாள் முதலே மஹிந்த ராஜபக்ஷாக்களுக்கு நோவினை செய்யும் விடயங்களையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போல் போட் (Pol Pot, போல் பாட் – மே 19, 1928 – ஏப்ரல் 15, 1998) முன்னாள் கம்போடிய பொதுவுடமை சர்வாதிகாரி ஆவார். 1970 களில் தொடங்கப்பட்ட சிவப்பு கெமர் இயக்கத்தின் தலைவராக இருந்து 1976 முதல் 1979 வரை கம்போடியாவின் பிரதமராக இருந்தார்.
இவர் பிரதமராக இருக்கும் பொழுது பல கம்போடிய மக்களை வதை முகாம்களில் அடைத்து வைத்திருந்தார். இதனால், கம்போடிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 26 வீதமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
1979 இல் வியட்நாம் படையெடுத்து இவரது சிவப்பு கெமர் அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. போல் போட் தென்மேற்கு கம்போடியக் காட்டுக்கு தப்பியோடினார்.
பின்னர், 1989 இல் வியட்நாம் கம்போடியாவிலிருந்து பின்வாங்கியபோது, போல் போட் திரும்பவும் கம்போடியா சென்று புதிய கம்போடிய அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடாத்தியுள்ளார். பிற்பட்ட காலப் பகுதியில் 1997 இல் இவர் கைது செய்யப்பட்டு இறக்கும் வரையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment