Ads (728x90)

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியது தவறு என்றால்,  ஞானசார தேரர் பிரபாகரன் குறித்து என்னிடம் கூறியதும் சட்டவிரோதமே என அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நல்லவவர், வல்லவர், அவரை நாம் அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம். உண்மையில் அவர் இன்னமும் உயிருடன் இருந்திருக்க வேண்டும்.  இந்நாட்டில் உள்ள  பிரபல சிங்கள அரசியல் தலைவர்களை விட பிரபாகரன் சிறந்தவர்.

பிரபாகரன் கொண்ட கொள்கையில் நேர்மையாக இருந்தார். இன்றுள்ள பல சிங்கள அரசியல்வாதிகள், கொண்ட கொள்கைக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்பவர்கள் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரே இந்த கருத்தினை பகிரங்கமாக ஊடகங்களின் முன்னால் வந்து கூறியதுடன் என்னிடமும் நேரடியாக சொல்லியுள்ளர்.

விஜயகலா மகேஸ்வரனை மாத்திரம் விமர்சிப்பது ஏன்?  புலிகள் இயக்கம் தடை செய்யபட்டுள்ளதால், அதைப்பற்றி விஜயகலா பேசுவது சட்டவிரோதம் என கூறலாம் எனின், அப்படியானால், அன்று ஞானசாரர் கூறியதும் சட்ட விரோதம் அல்லவா? என்றும் அமைச்சர் மனோகணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget