Ads (728x90)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது. 

எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இருவரும் உயர் நீதிமன்றின் அனுமதியில்லாமல் வெளிநாடு செல்ல முடியாது என இதன்போது உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும்  எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இதனை அறிவித்துள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget