நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாகவும், அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று 14ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சட்ட ரீதியாக தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பிற்கு அமைய புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுவரை பதில் ஜனாதிபதியாக பிரதமர் செயற்படுவார் எனவும் அறிவித்துள்ளார்.
Post a Comment