பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச் சாலை ஆணையர் நாயகம் துஷார நிஷாந்த உபுல்தெனியவை, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தியபோதே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு நத்தார் பண்டிகையின்போது 57 கைதிகளும், 2025 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது 11 கைதிகளும் தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாதபோதிலும் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன் வெசாக் போயா பண்டிகையின் போது நாடு முழுவதும் உள்ள 29 சிறைச்சாலைகளில் இருந்து 338 கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களில் குறைந்தது இரண்டு பேர் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment