Ads (728x90)

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் தலைநகர் தெஹிரானில் உள்ள அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

ஜி7 உச்சி மாநாட்டில் இருந்து முன்கூட்டியே புறப்பட்ட அவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரானுக்கு அணு ஆயுதம் இருக்க முடியாது. இதை நான் பலமுறை கூறியுள்ளேன். அனைவரும் உடனடியாக தெஹிரானை காலி செய்ய வேண்டும் என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக ஈரானிய அணுசக்தி திட்டத்தை முடக்கும் நோக்கில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

டிரம்ப் தனது ஜி7 மாநாட்டு பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு வாஷிங்டன் திரும்பியதற்கு மத்திய கிழக்கு நிலவரமே காரணம் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தெஹிரானின் பல பகுதிகளில் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும், மக்கள் நகரத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget