Ads (728x90)

பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகினால், அதற்குப் பாடசாலைகளின் அதிபர்களே பொறுப்பேற்க வேண்டும் என கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 25,505 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவினால் பல பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். 

இதனையடுத்தே டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து மாகாணக் கல்வி பணிப்பாளர்களுக்கும் கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.

இதன்படி சகல பாடசாலை வளாகங்களிலும் நுளம்பு பரவுவதைத் தடுக்கும் வகையிலான திட்டமொன்றைச் செயற்படுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. 

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் காண்பதற்காக, கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும், பாடசாலை வளாகத்தில் அத்தகைய இடங்கள் அடையாளம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர் தனிப்பட்ட முறையில் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget