Ads (728x90)

இலங்கைக்கு இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி நிவாரணத்தை வழங்கியுள்ளது. 

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையேயான சிறப்புப் பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ் மீதமுள்ள நிலுவைத் தொகையைப் புதுப்பித்து இந்த 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணத்தை இந்தியா வழங்கியுள்ளது.

இலங்கையின் மொத்த அதிகாரபூர்வ இருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் தற்போதைய உதவி முக்கியமானதாக அமைகின்றது. 

பொருளாதார நெருக்கடி ஆரம்பித்ததிலிருந்து இலங்கைக்கு இந்தியா வழங்கும் மொத்த உதவி 7 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இதில் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மானியங்களும் உள்ளடங்குகின்றன.


Post a Comment

Recent News

Recent Posts Widget