Ads (728x90)

மும்பையில் நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டியில் நேபாளம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாளம் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஸ்கொட்லாந்து அணியின் சார்பில் மைக்கேல் ஜோன்ஸ் 71 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

தொடர்ந்து 171 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் நேபாளம் அணியின் சார்பில் அதிகபட்சமாக திபேந்திரா சிங் ஐரி 50 ஓட்டங்களையும் மற்றும் குஷால் புர்த்தேல் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget