Ads (728x90)

பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று  பதவியேற்றுள்ளார்.

2024 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் மூலம் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் பங்களாதேஷில் கடந்த 18 மாதங்களாக வழிநடத்தி வந்த இடைக்கால அரசாங்கத்திடமிருந்து தாரிக் ரஹ்மான் அதிகாரத்தைப் பொறுப்பேற்றார்.

பெப்ரவரி 12 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மானின் தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி 212 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையிலான கூட்டணி 77 இடங்களை பெற்றது.

தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஏ.எம்.எம். நசீர் உதீன் முன்னிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முற்பகல் பதவியேற்றனர்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் முன்னிலையில் தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்றார்.

தனது 17 ஆண்டுகால பிரித்தானிய நாடுகடந்த வாழ்க்கையை முடித்துக்கொண்டு கடந்த டிசம்பரில் நாடு திரும்பிய 60 வயதான தாரிக் ரஹ்மான், தற்போது நாட்டின் தலைவராக உருவெடுத்துள்ளார்.

மேலும் இந்த வெற்றி பங்களாதேஷூக்கும், ஜனநாயகத்திற்கும் உரித்தானது. எதேச்சதிகார ஆட்சியால் சீர்குலைந்துள்ள பொருளாதாரம், பலவீனமான அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்கு மத்தியில் எமது பயணம் தொடங்குகிறது எனக் தெரிவித்துள்ளார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget