Ads (728x90)

இலங்கை மின்சார சபை 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சபைச் சட்டத்தின் கீழ், மின் உற்பத்தி, கடத்தல், விநியோகம் மற்றும் அமைப்பு செயல்பாடுகளுக்காக ஆறு புதிய தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மின்சார சபையின் பணிகள் மற்றும் கடமைகளை மறுசீரமைத்து எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

இந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது.  

இதன்கீழ் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்தின் பல உப பிரிவுகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget