Ads (728x90)

தங்களுக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு துரோகம் இழைத்து, கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை இரத்து செய்வதற்கான விசேட சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளிலிருந்து எவரொருவரையும் அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளும் எண்ணமோ அல்லது எதிர்பார்ப்போ எமக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்திற்குப் பொதுமக்களால் மிகவும் தெளிவானதொரு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளதால், அதற்கமையவே அரசாங்கம் தனது எதிர்கால அரசியல் மற்றும் நிர்வாக நகர்வுகளை முன்னெடுக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget