Ads (728x90)

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

பேருந்துக் கட்டண திருத்தங்களுக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள தேசியக் கட்டணச் சூத்திரத்திற்கு அமையவே, கட்டணங்கள் திருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம் 4 சதவீதத்திற்கும் அதிகமானதாக இருந்தால் மாத்திரமே பேருந்துக் கட்டணத்தை திருத்த முடியும் என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் பேருந்துகள் சேவையில் இருந்து விலகுவதாக கூறுவதில் எவ்வித நியாயமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget