இலங்கையின் தேசிய அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பு, நான்கு முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களின் மூலம் 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் 132 கிலோ மீற்றரால் விரிவாக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விரிவாக்கத்திற்குப் பங்களிக்கும் நான்கு முன்னெடுப்புகளில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 2 முக்கியப் பிரிவுகளில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான 37 கிலோமீற்றர் நீளமுள்ள முதல் கட்டப் பகுதியும், பொத்துஹெரவிலிருந்து கலகெதர வரையிலான 33 கிலோமீற்றர் நீளமுள்ள மூன்றாம் கட்டப் பகுதியும் இதில் அடங்குகின்றன.
மேலும் குருணாகல் – கலேவெல இடையிலான 38 கிலோமீற்றர் பிரிவின் பணிகள் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
233 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் 12 ஒப்பந்தப் பொதிகளாகப் பிரிக்கப்பட்டு, வெளிப்படையான விலைமனுக்கோரல் முறையின் கீழ் உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களைக் கொண்டு விரைவாகச் செயற்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
.jpeg)
Post a Comment