Ads (728x90)

சூதாட்­டத்தில் ஈடு­பட்­ட­ தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் வீர­ருக்கு 8 ஆண்டுகள் விளை­யாடுவதற்கு தடை விதிப்பதற்கு தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் சபை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. தென்­னா­பி­ரிக்க அணியின் முன்னாள் வேகப்­பந்து வீச்­சா­ள­ரான சோட்­சோபே 2014 ஆம் ஆண்டுடன்  சர்­வ­தேச போட்­டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு தென்­னா­பி­ரிக்­காவில் நடந்த உள்ளூர் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டியில் அவர் சூதாட்­டத்தில் ஈடு­பட்­டது கண்டு பிடிக்­கப்­பட்­டது. 
முதலில் தன் மீதான குற்­றச்­சாட்டை மறுத்த அவர் பின்னர் அதை ஒப்­புக்­கொண்டார். விசார­ணையின் முடிவில் சூதாட்­டத்தில் ஈடு­பட்­ட­தற்­காக சோட்­சோ­பேக்கு 8 ஆண்டுகள் விளை­யாட தடை விதித்து தென்­னா­பி­ரிக்க  கிரிக்கெட் சபை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.
சோட்­சோபே ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலாமிடத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image result for தென்னாபிரிக்க கிரிக்கெட்

Post a Comment

Recent News

Recent Posts Widget