Ads (728x90)

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்கு 3 மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அடங்­கிய தீர்ப்­பா­யத்­தின் (ட்ரயல் அட் பார்) முன்­னி­லையில் இன்று விசா­ர­ணைக்கு வரு­கி­றது.
யாழ்ப்­பாண மேல் நீதி­மன்ற நீதி­பதி மீதான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தைக்   கண்­டித்து வடக்கு மாகாண சட்­டத்­த­ர­ணி­கள் இன்று சேவைப் புறக்­க­ணிப்­பில் ஈடு­ப­டு­வ­தால் சாட்­சி­யங்­களை முன்­னெ­டுப்­பதா? ஒத்­தி­வைப்­பதா? என்ற முடிவை தீர்ப்­பா­யம் இன்று காலை எடுக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.
மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­தி­ரன் தலை­மை­யில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அன்­ன­லிங்­கம் பிரே­ம­சங்­கர், மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன்            ஆகி­யோர் அடங்­கிய தீர்ப்­பா­யம் இன்று திங்­கட்­கி­ழமை காலை 9 மணிக்கு யாழ்ப்­பா­ணம் நீதி­மன்ற வளா­கத்­தின் 2ஆவது மாடி­யி­லுள்ள திறந்த மன்­றில் கூடு­கி­றது.
ஊர்­கா­வற்­றுறை நீதி­வான் மொக­மட் றியாழ் இன்று சாட்­சி­ய­ம­ளிக்க தீர்ப்­பா­யத்­தால் அழைக்­கப்­பட்­டி­ருந்­தார். அத்­து­டன், வழக்­கின் முக்­கிய சாட்­சி­ய­மான           வித்­தியா படு­கொலை தொடர்­பில் முழு­மை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் பொலிஸ் பரி­சோ­த­கர் நிசாந்த சில்வா சாட்­சி­ய­ம­ளிப்­பார் என்று அறி­விக்­கப்­பட்­டது. அவ­ரது சாட்­சி­யம் நீண்ட நேரம் இடம்­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget