Ads (728x90)

அமெரிக்க அரசில் சட்ட விதிமுறைகள் சீர்திருத்தத் துறை தலைவராக இந்திய வம்சாவளி வழக்கறிஞர் நியோமி ராவ் நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்க செனட் அவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது.

செனட் அவை உறுப்பினர்கள் கட்சி அடிப்படையில் பிரிந்து அதிபர் ட்ரம்ப்பின் பல்வேறு நியமனங்களைத் தடுத்து வரும் வேளையில், நியோமி ராவ் அவையின் ஒப்புதலை பெற்றார். இவரது நியமனத்துக்கு ஆதரவாக 54 வாக்குகளும், எதிர்த்து 41 வாக்குகளும் கிடைத்தன.

44 வயதான நியோமி ராவ், உச்ச நீதிமன்ற நீதிபதி கிளாரனஸ் தாமஸிடம் உதவியாளராக பணி யாற்றிவர். தற்போது ‘அட்மினிஸ்ட் ரேட்டிவ் கான்பெரன்ஸ்’ என்ற பெட ரல் அமைப்பில் பொது உறுப்பின ராக உள்ள நியோமி ராவ், இதற்கு முன் அமெரிக்க அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.

நியோமி ராவ் நியமனம் உறுதி செய்யப்பட்டதை அமெரிக்க மூத்த எம்.பி.க்கள் வரவேற்றுள்ளனர்.
செனட் உறுப்பினர் ரான் ஜான்சன் கூறும்போது, “நாட்டுக் கும் நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோருக்கும் ஏற்படும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதில் நியோமி ராவ் உதவிடுவார்” என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget