Ads (728x90)

மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்த உப பொலிஸ் பரி­சோ­த­கர் ஹேம­சந்­தி­ர­வுக்கு, சமூக வலைத் தளங்­க­ளில் தமிழ் இளை­ஞர்­கள் உள்­ளிட்ட பல­ரும் அஞ்­ச­லி­யை­யும், இரங்­கல்­க­ளை­யும் வெளிப்­ப­டுத்­தி­னர்.
அத்­து­டன், உயி­ரி­ழந்த பொலிஸ் அலு­வ­ல­ரின் மனை­வி­யின் காலில் நீதி­பதி வீழ்ந்து அழுத சம்­ப­வம் தொடர்­பில் சிங்­கள மக்­கள் நெகிழ்ச்­சி­யான கருத்­துக்­களை சமூ­க­வ­லைத்தளங்­க­ளில் பகிர்ந்­துள்­ள­னர்.
நல்­லூ­ரில் நேற்று முன்­தி­னம் மாலை, மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யனை நோக்கி மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் அவ­ரது மெய்ப்­பா­து­கா­வ­லர் உயி­ரி­ழந்­தார்.
ஹேம­சந்­தி­ர­வின் உயி­ரி­ழப்­புத் தொடர்­பில் தமிழ் இளை­யோர் சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் தங்­க­ளது ஆழ்ந்த இரங்­கல்­களை வெளிப்­ப­டுத்­தி­னர்.‘நீங்­கள் காப்­பாற்­றி­யது நீதி­ப­தியை அல்ல, யாழ்ப்­பாண மக்­க­ளின் நம்­பிக்­கையை. ஆழ்ந்த அனு­தா­பங்­கள்!!’, ‘சொந்த இனத்­தில் துரோ­கி­கள்…..!!! ஆனால் நம் எதி­ரி­கள் என்று வசை­பா­டிய சிங்­கள இனத்­தில் தியா­கி­க­ளும் உள்­ள­னர் என நிரூ­பித்­த­வன்’, ‘ஓ வீரனே….உந்­தன் பெய­ரும் எங்­கள் மண்­ணில் எழுதி வைக்­கப்­ப­டும்! எம் நீதி­தே­வ­னுக்­காய் உயிர்த்­தி­யா­கம் செய்த காவ­ல­னும் தன் காவ­ல­னுக்­காய் தலை குனிந்து கத­றிய நீதி­தே­வ­னும் மனி­தம் இன்­னும் செத்­து­வி­ட­வில்லை என்­ப­தற்­கான உதா­ரண புரு­சர்­கள்! வீர அஞ்­ச­லி­கள் காவலா!’, ‘நீ காப்­பாற்­றி­யது ஒரு உயிர் அல்ல.
அது பல உயிர்­க­ளுக்கு வாழும்­போதே நிம்­மதி கிடைக்­கக்­கூ­டிய சட்­டத்தை நிலை­யாட்ட கூடிய நீதியை’ என்­ற­வாறு பல்­வேறு கருத்­துக்­கள் பதி­வி­டப்­பட்­டுள்­ளன. பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரது பணியை மெச்­சும் வகை­யில் அவை அமைந்­தி­ருந்­தன.
இதே­வேளை, தனது மெய்ப்­பா­து­கா­வ­ல­ரின் இழப்பை தாங்க முடி­யாத மேல் நீதி­மன்ற நீதி­பதி, ஹேமச்­சந்­தி­ர­வின் குடும்­பத்­தி­னர் முன்­னி­லை­யில் கதறி அழு­தார். இந்த உருக்­க­மான சம்­ப­வம் தமிழ் மக்­கள் மத்­தி­யில் மட்­டு­மன்றி, ஒட்­டு­மொத்த நாட்டு மக்­க­ளின் இத­யங்­களை கனக்­கச் செய்­துள்­ளது.
மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னின் இந்­தக் குணத்தை தென்­னி­லங்கை ஊட­கங்­கள் வெகு­வா­கப் பாராட்டி செய்தி வெளி­யிட்­டுள்­ளன. சமூக ஊட­கங்­க­ளி­லும் சகல இனங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளும் நீதி­ப­தி­யின் குணா­தி­ச­யத்தை வர­வேற்­றுள்­ள­னர்.
இலங்­கை­யில் இவ்­வாறு எந்­த­வொரு அர­சி­யல்­வா­தி­யும் தனது மெய்ப்­பா­து­கா­வ­ல­ரின் உயி­ரி­ழப்பை மதித்­தில்லை. நீதி­ப­தி­யான இளஞ்­செ­ழி­யன், ஹேமச்­சந்­தி­ர­வின் குடும்­பத்­தி­னர் முன்­னி­லை­யில் கதறி அழும் காட்சி நெகிழ வைப்­ப­தாக அவர்­கள் பதி­விட்­டுள்­ள­னர்.
படித்­த­வர், பதவி பெற்­ற­வர் என்ற போதி­லும், மனித உயி­ருக்கு முன்­னால் இவ்­வ­ளவு நெகிழ்ச்­சி­ய­டை­வ­தென்­பது பாராட்­டப்­பட வேண்­டிய விட­யம் என்­றும் அவர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget