Ads (728x90)

ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்கு இலங்­கை­யி­லி­ருந்து பங்­கு­பற்­றிய வீர, வீராங்­க­னை­க­ளுக்கு ஜனா­தி­பதி மாளி­கையில் இன்று ஜனா­தி­ப­தி­ மைத்திரிபால சிறிசேன விரு­துகள் வழங்கி கௌர­விக்­க­வுள்ளார்.
விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் 50 ஆவது வருட பூர்த்­தியை முன்­னிட்டு இந்த ஒலிம்பிக் வீர, வீராங்­க­னை­க­ளுக்கு இந்த கௌர­விப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.
இலங்­கை­யி­லி­ருந்து ஒலிம்பிக் போட்­டி­க­ளில் பங்­கு­பற்­றி­ய­வர்­களில் தற்­போது உயி­ருடன் இருப்­ப­வர்கள் 67 வீரர்கள் எனவும் அதில் 23 வீரர்கள் தற்­போது வெளிநா­டு­களில் வசித்து வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
அதனால் இன்­றைய கௌர­விப்பு நிகழ்வில் மொத்தம் 44 வீர, வீராங்கனைகள் ஜனாதிபதி யினால் விருது வழங்கி கௌரவிக்கப் படவுள்ளனர்.
கடந்த சில நாட்களில் ஒலிம்பிக்கில் பங்குபற்றிய வீர, வீராங்கனைகள் இணைந்து ஒரு சங்கம் ஒன்றையும் புதிதாக உருவாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget