Ads (728x90)

மீள்­கு­டி­யேற்ற அமைச்­சால் வீட்­டுத் திட்­டத்­துக்­காக வழங்­கப்­ப­டும் பணம் போதா­துள்­ளது. அதற்­காக பொருத்து வீடு­கள் எமக்கு வேண்­டாம். கல் வீட்­டுக்­கான நிதியை அதி­க­ரித்து வழங்க வேண்­டும். இவ்­வாறு மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ரி­டம் கோரிக்கை விடுத்­த­னர் மயி­லிட்­டி­யில் மீள்­கு­டி­ய­மர்ந்த மக்­கள். இரா­ணு­வத்­தின் கட்­டுப்­பாட்­டில் இருந்து அண்­மை­யில் மயி­லிட்­டித் துறை­மு­கம் விடு­விக்­கப்­பட்­டது. அந்­தப் பகுதி கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளுக்கு வாழ்­வா­தார உத­வி­கள் வழங்­கும் நிகழ்வு நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்ட அமைச்­ச­ரி­டமே மக்­கள் இவ்­வாறு கோரிக்கை விடுத்­த­னர்.

“தற்­போது வீட்­டுத் திட்­டத்­துக்­காக 8 லட்­சம் ரூபா வழங்­கப்­ப­டு­கின்­றது. இந்­தத் தொகை 5 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. தற்­போது அது போதா­துள்­ளது. இந்­தத் தொகையை அதி­க­ரித்து வழங்க வேண்­டும். எமது பிர­தே­சத்­துக்கு உகந்த கல் வீடு­க­ளையே நாம் கோரு­கின்­றோம். எமக்­குப் பொருத்து வீடு­கள் வேண்­டாம். கல் வீட்­டுக்­கான தொகை­யையே அதி­க­ரித்­துத் தர வேண்­டும் என்று கோரு­கின்­றோம்.”- என்று மக்­கள் மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ரி­டம் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget