Ads (728x90)

பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வை வழங்­கு­வ­தில் கூட்டு அரசு மந்­த­க­தி­யி­லேயே செயற்­ப­டு­கின்­றது என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டும். இன்­ன­மும் அர­சி­யல் கைதி­க­ளின் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­ப­ட­வில்லை. தமிழ் மக்­க­ளின் காணி­கள் குறித்து இறு­தித் தீர்­மா­னங்­கள் எடுக்­கப்­ப­ட­வில்லை.
காணா­மற்­போ­னோர் விட­யம் எனப் பல்­வேறு அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­க­ளுக்கு நாம் இன்­ன­மும் தீர்வு காண­வில்லை. இதன் கார­ண­மாக அனைத்து விட­யங்­க­ளி­லும் சாத­கத்­தன்மை எட்­டப்­பட்­டுள்­ளது என்று எம்­மால் தெரி­விக்­க­மு­டி­யாது” இவ்­வாறு தெரி­வித்­தார் சுகா­தார அமைச்­ச­ரும் அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன.
மேலும் ஐ.நா. சபை­யு­டன் அமைச்­சர் விஜ­ய­தாச ராஜ­பக்ச முரண்­பட்­ட­தை­யும் அவர் கடு­மை­யா­கச் சாடி­னார். “மூளை இல்­லா­த­வர்­கள்­தான் ஐ.நா.வுடன் மோது­வார்­கள்” என்­றார்.
அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் செய்­தி­யா­ளர்­கள் மாநாடு அரச தக­வல் திணைக்­க­ளத்­தில் நேற்று நடை­பெற்­றது.
“ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் பென் எமர்­சன் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டி­ருந்­தார். அது குறித்து அர­சின் நிலைப்­பாடு என்ன? ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ள­ரு­டன் நீதி அமைச்­சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ச கடும் வாக்­கு­வா­தப்­பட்­டுள்­ளார்.
இது தொடர்­பி­லும் அர­சின் கருத்து என்ன? என்று எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன பதி­ல­ளிக்­கும்­போது மேலும் கூறி­ய­தா­வது:
எவ­ரு­டன் மோது­வது என்று தெரிந்­து­கொள்­ள­வேண்­டும். சிலர் ஐக்­கிய நாடு­கள் சபை­யு­டன் மோதப் பார்க்­கின்­றார்­கள். இலங்­கை­யும் ஐ.நாவின் அங்­கத்­துவ நாடே. மூளை­யில்­லா­த­வர்­களே ஐ.நாவுக்கு எதி­ரான கருத்­து­களை வெளி­யி­டு­கின்­ற­னர்.
ஐ.நாவி­லி­ருந்து வரும் சிறப்பு நிபு­ணர்­க­ளுக்கு நாம் விளக்­க­ம­ளிக்­க­வேண்­டும். அவர்­கள் எமக்கு எதி­ராக முன்­வைக்­கப்­ப­டும் முறைப்­பா­டு­களை எடுத்­துக்­கொண்டே வரு­வார்­கள். ஐ.நாவின் அங்­கத்­துவ நாடென்­ப­தால் அவர்­க­ளின் கேள்­விக்கு நாம் பதி­ல­ளிக்­க­வேண்­டும்.
மனித உரி­மை­க­ளைப் பாது­காப்­பது தொடர்­பான அனைத்து உடன்­ப­டிக்­கை­க­ளி­லும் இலங்கை கையெ­ழுத்­திட்­டுள்­ளது. விசா­ர­ணை­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளிக்­க­வும் உடன்­ப­டிக்­கை­யில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணை­க­ளின் பின்­னர் கைது­செய்­யப்­ப­டு­வ­தற்கு மாத்­தி­ரமே நாம் அனு­ம­தி­ய­ளித்­தி­ருக்­க­வில்லை.
2009ஆம் ஆண்டு போர் நிறை­வ­டைந்த பின்­னர் நல்­லி­ணக்க விட­யங்­களை நாம் மேற்­கொண்­டி­ருந்­தால் இந்­த­நிலை ஏற்­பட்­டி­ருக்­காது. 2015ஆம் ஆண்டு நாம் வெற்­றி­பெற்­றி­ருக்­கா­வி­டின் இந்த ­வரு­டம் மார்ச் மாதம் இலங்­கைக்கு எதி­ரா­கப் பன்­னாட்­டுப் பொரு­ளா­தா­ரத் தடை வரு­வதை எவ­ரா­லும் தடுத்­தி­ருக்­க­மு­டி­யாது.
அவ்­வாறு பொரு­ளா­தார தடை விதித்­தி­ருக்­கும் பட்­சத்­தில் இலட்­சக்­க­ணக்­கான மக்­கள் வேலை­யில்­லா­மல் வீதிக்கு வந்­தி­ருப்­பார்­கள். அந்­நிய வரு­மா­ன­மற்று எமது நாடு படு­கு­ழி­யில் வீழ்ந்­தி­ருக்­கும்.
நாடு என்ற ரீதி­யில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வை வழங்­கு­வ­தில் நாம் மந்­த­க­தி­யி­லேயே செயற்­ப­டு­கின்­றோம் என்­பதை ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டும்.
இன்­ன­மும் அர­சி­யல் கைதி­க­ளின் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­ப­ட­வில்லை. தமிழ் மக்­க­ளின் காணி­கள் குறித்து இறு­தித் தீர்­மா­னங்­கள் எடுக்­கப்­ப­ட­வில்லை, காணா­மற்­போ­னோர் விட­யம், மீள்­கு­டி­யேற்­றம் எனப் பல்­வேறு அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­க­ளுக்கு நாம் இன்­ன­மும் தீர்வு காண­வில்லை.
இதன் கார­ண­மாக அனைத்து விட­யங்­க­ளி­லும் சாத­கத்­தன்மை எட்­டப்­பட்­டுள்­ளது என்று எம்­மால் தெரி­விக்­க­மு­டி­யாது.
நாட்­டி­லுள்ள அனைத்­துத் தரப்­புக்­கும் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்­குப் பதி­ல­ளித்­துத்­தான் முன்­னோக்­கிப் பய­ணிக்­க­வேண்­டும்.
கேள்வி: அந்த அறிக்­கை­யில் கைது­செய்­யப்­பட்­டுச் சிறை­க­ளில் 5 வரு­டங்­க­ளுக்கு மேலாக அடைக்­கப்­பட்­டுள்ள 70இற்­கும் மேற்­பட்­டோ­ருக்கு வழக்­குப் பதி­வு­செய்­யப்­ப­ட­வில்லை என்று கூறப்­பட்­டுள்­ளதே?
பதில்: அதில் கூறப்­ப­டு­வது தமிழ் அர­சி­யல் கைதி­க­ளை­யா­கும். கடந்த அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தி­லும் அது­பற்றி நான் கலந்­து­ரை­யா­டி­னேன். வழக்­குப் பதி­வு­செய்­ப­வர்­கள் மீது வழக்­குப் பதி­வைச் செய்­யு­மா­றும், ஏனை­ய­வர்­களை விடு­விக்­கு­மா­றும் கூறி­யி­ருந்­தேன். 1971, 1977ஆம் ஆண்டு புரட்­சி­யின்­போது கைது­செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்­ட­து­போன்று இவர்­க­ளை­யும் விடுக்­க­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னேன்.
கேள்வி: ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் எமர்­சன் சிறைச்­சா­லைக்­குச் செல்ல அனு­ம­தி­ய­ளித்­தது யார்? என்று அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் அரச தலை­வர் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளார் என வெளி­யா­கி­யுள்­ளதே?
பதில்: அரச தலை­வர் எதிர்­ம­றை­யா­கக் கேட்­க­வில்லை. யாரி­டம் அனு­மதி பெற்­றுச் சிறைச்­சா­லைக்­குச் சென்­றார் என்­று­தான் கேட்­டார். அவர் பாது­காப்பு அமைச்­ச­ராக உள்­ள­மை­யா­லேயே இந்­தக் கேள்­வி­யைக் கேட்­டார். எனி­னும், சிறைச்­சா­லை­கள் தொடர்­பான பன்­னாட்டு விட­யத்தை அய­லு­றவு அமைச்சு நீண்­ட­கா­ல­மா­கக் கையாள்­வ­தால் அந்த அமைச்சே இதற்கு அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget