Ads (728x90)

மாணவி வித்­தியா படு­கொலை வழக்­கின் சந்­தே­க­ந­பர் சுவிஸ்­கு­ மாரை                  புங்­கு­டு­தீ­வில் வைத்­துக் கைது செய்து யாழ்ப்­பா­ணத்­துக்கு அழைத்து வந்த உப பொலிஸ் பரி­சோ­த­கர் சிறி­க­ஜன், அவரை யாழ்ப்­பா­ணம் தலை­மை­ய­கப் பொலிஸ் நிலை­யத்­தில் முற்­ப­டுத்­து­ வ­தற்கு அறவே மறுத்­து­விட்­டார் என்று யாழ்ப்பாபாண முன்­னாள் மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் லக்ஸ்­மன் வீர­சே­கர தீர்ப்­பா­யத்­தி­டம் நேற்­றுச் சாட்­சி­ய­ம­ளித்­தார்.
“சுவிஸ்­கு­மா­ருக்கு எதி­ராக சாட்­சி­யங்­கள் இல்லை என்று உப பொலிஸ்                   பரி­சோ­த­கர் சிறி­க­ஜன் என்­னி­டம் கூறி­னார். எனி­னும் சந்­தே­க­ந­பர் என்ற               அடிப்­ப­டை­யில் சுவிஸ்கு­ மாரை பொலிஸ் நிலை­யத்­தில் முற்­ப­டுத்து­ மாறு          அவ­ருக்­குப் பணிப்­பு­ரை­வி­டுத்­தேன். அதனை ஏற்க அவர் மறுத்­து­விட்­டார். பின்­னர் வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரின் அறி­வு­றுத்­த­லில் சுவிஸ்­     கு­மார் விடு­விக்­கப்­பட்­டார்” என்று மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் லக்ஸ்­மன்       வீர­சே­கர சாட்­சி­ய­ம­ளித்­தார்.
புங்­கு­டு­தீவு மாணவி சிவ­லோ­க­நா­தன் வித்­தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்­பு­ணர்­வின் பின் கோர­மா­கக் கொலை செய்­யப்­பட்­டார். இந்­தக் கொடூ­ரச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­கள் மேல் நீதி­மன்ற நீதி­பதி             பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­தி­ரன் தலை­மை­யில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள்                 அன்­ன­லிங்­கம் பிரே­ம­சங்­கர், மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் ஆகி­யோர்               அடங்­கிய தீர்ப்­பா­யத்­தின் இரண்­டாம் கட்ட அமர்வு நேற்­றுக் காலை 9 மணி­ய­ள­வில் யாழ்ப்­பா­ணம் நீதி­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யின் 2ஆவது மாடி­யி­லுள்ள திறந்த மன்­றில் கூடி­யது.
வழக்­குத் தொடு­நர் சார்­பில் பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி பி. குமா­ர­ரட்­ணம்         தலை­மை­யில் அரச சட்­ட­வா­தி­கள் நாக­ரத்­தி­னம் நிஷாந்த், லக்சி டீ சில்வா, மாலினி விக்­னேஸ்­வ­ரன் மற்­றும் பிரிந்தா ரெஜிந்­தன் ஆகி­யோர் முன்­னி­லை­யாகி­யி­ருந்­த­னர்.
பூபா­ல­சிங்­கம் இந்­தி­ர­கு­மார், பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார், பூபா­ல­சிங்­கம்                 தவக்­கு­மார், மகா­ லிங்­கம் சசி­த­ரன் , தில்­லை­நா­தன் சந்­தி­ர­காசன், சிவ­தே­வன் துஷாந்த் , பழனி ரூப­சிங்­கம் குக­நா­தன் , ஜெய­த­ரன் கோகி­லன் , மற்­றும்            மகா­லிங்­கம் சசிக்­கு­மார் ஆகிய ஒன்­பது எதி­ரி­க­ளும் தீர்ப்­பா­யத்­தில்                                       முற்­ப­டுத்­தப்­பட் டனர்.
அத­னைத் தொடர்ந்து  ஏழாம் நாள் சாட்­சிப் பதி­வு­கள் ஆரம்­ப­மா­னது.
இந்த வழக்­கில் மேலும் இரு சாட்­சி­யங்­க­ளை­யும் மூன்று சான்­றுப் பொருள்­க­ளை­யும் இணைப்­ப­தற்கு பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி தீர்ப்­பா­யத்­தி­டம் விண்­ணப்­பம் செய்­தார்.
அதற்கு எதி­ரி­கள் தரப்பு சட்­டத்­த­ரணி மகிந்த ஜெய­வத்­தன ஆட்­சே­பனை தெரி­வித்து தீர்ப்­பா­யத்­தி­டம் விண்­ணப்­பம் செய்­தார். அதனை தீர்ப்­பா­யம் ஏக மன­தாக நிரா­க­ரித்து. “இந்த வழக்­கின் தீர்ப்பு வெளிப்­ப­டுத்­தப்­ப­டும் வரை­யில் குற்­றப்­ப­கிர்­வுப் பத்­தி­ரத்­தில், தேவைக்­கேற்ப திருத்­தங்­கள் செய்­வ­தற்கு சட்­டமா அதி­ப­ருக்கு                 உரித்­துண்டு. அதன் பிர­கா­ராம் புதி­தாக இணைக்­கப்­பட இருக்­கும் சாட்­சி­யங்­கள் இரண்­டும் நிபு­ணத்­துவ சாட்­சி­யங்­கள். அத­னால் அவற்றை புதி­தாக சேர்த்­துக்­         கொள்­வ­தற்கு வழக்­குத் தொடு­ந­ருக்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­டு­கி­றது” என்று             தீர்ப்­பா­யம் கட்­ட­ளை­யிட்­டது.
புதி­தாக 52ஆவது சாட்­சி­யாக இர­சா­ய­னப் பகுப்­பாய்வுத் திணைக்­கள மூத்த அதி­கா­ரி­யும், 53ஆவது சாட்­சி­யாக ஜின்­டெக் நிறு­வ­னத்­தின் மூத்த விஞ்­ஞா­னி­யும் நிபு­ணத்­துவ சாட்­சி­யங்­க­ளாக இணைத்­துக்­கொள்­ளப்­பட்­ட­னர். அதே­வேளை சான்­றுப் பொருள்­க­ளாக பற்­று­சீட்­டுக்­கள் , இர­சா­யனப் பகுப்­பாய்வு அறிக்கை , மர­ப­ணுப் பரி­சோ­தனை அறிக்கை ஆகி­யவை புதி­தாக இணைக்­கப்­பட்­டன.
எஸ்.ஐ. சாட்­சி­யம்
இந்த வழக்­கின் 21ஆவது சாட்­சி­யான உப பொலிஸ் பரி­சோ­த­கர் மர­கல இரான் சாட்­சி­ய­ம­ளித்­தார்.
“சம்­ப­வம் நடை­பெற்ற காலப் பகு­தி­யில் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்­தில் கட­மை­யாற்றி வந்­தேன்.அந்த பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யின் பணிப்­பின் பேரில் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்­தின் கீழ் இயங்­கும் குறி­காட்­டு­வான் பொலிஸ் காவ­ல­ர­ணில் பொறுப்­ப­தி­கா­ரி­யா­கப் பணி­பு­ரிந்­தேன்.
2015 மே மாதம் 14ஆம் திகதி காலை நான் குறி­காட்­டு­வான் பொலிஸ் காவ­ல­ர­ணில் கட­மை­யில் இருந்­தேன் , புங்­கு­டு­தீவு ஆல­டிச் சந்­திக்கு அரு­கில் மக்­கள் கூட்­ட­மாக காணப்ப டுவ­தாக எனக்­குத் தக­வல் கிடைத்­தது. அந்­தப் பகு­திக்கு நான் எனது பொலிஸ் குழு­வு­டன் சென்றேன்.
ஆல­டிச் சந்­தி­யில் இருந்து சிறிது தூரம் உள்ளே சென்­றால் , பற்­றை­க்கா­டு­க­ளுக்கு மத்­தி­யில் பாழ­டைந்த கட்­ட­டங்­கள் உள்ள பகு­தி­யில் மக்­கள் கூட்­டம் காணப்­பட்­டது. அந்­தப் பகு­தி­யில் பாட­சாலை மாணவி ஒரு­வ­ரின் சட­லம் காணப்­பட்­டது. நான் நின்ற இடத்­தில் இருந்து சுமார் 15 மீற்­றர் தூரத்­தில் சட­லம் காணப்­பட்­டது” எனத் தெரி­வித்து சட­லம் காணப்­பட்ட நிலையை திறந்த மன்­றில் சாட்சி விவ­ரித்துக் கூறி­னார்.
அவ்­வேளை எதி­ரி­கள் தரப்பு சட்­டத்­த­ரணி மகிந்த ஜெய­வர்த்­தன, குறித்த பொலிஸ் சாட்சி , தக­வல் புத்­த­கத்தை பார்த்து சாட்­சி­யம் அளிக்­கா­மல் தனது வாக்­கு­              மூ­லத்தைப் பார்த்து சாட்­சி­யம் அளிக்­கின்­றார். அதனை அனு­ம­திக்க கூடாது என    மன்­றில் கோரி­னார்.
அதனை அடுத்து தீர்ப்­பா­யம், சாட்­சி­யத்­தி­டம், வாக்­கு­மூ­லத்தை பார்த்து சாட்­சி­யம் அளிக்­கா­மல் தக­வல் புத்­த­கத்தைப் பார்த்து சாட்­சி­யம் அளிக்­கு­மாறு அறி­வு­றுத்­தி­யது. அதனை அடுத்து சாட்­சி­யம் அளிப்­ப­வர் , தொடர்ந்து தனது சாட்­சி­யத்தை அளித்­தார்.
“நாம் அன்­றைய தினம் சட­லத்தை `உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பி­விட்டு, எமது பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி குயிண்­டஸ் குணால் பெரேரா (அப்­போ­தைய ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி) தலை­மை­யில் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.
அதன் பிர­கா­ரம் அன்­றைய தினம் (14ஆம் திகதி) இரவு 10 மணி­ய­ள­வில் பூபா­ல­சிங்­கம் இந்­தி­ர­கு­மார், பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார் மற்­றும் பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் ஆகிய மூவ­ரை­யும் அவர்­க­ளது வீட்­டு­க­ளுக்கு அரு­கில் வைத்­துக் கைது செய்­தோம்.
மறு­நாள் (15ஆம் திகதி ) மாண­வி­யின் இறு­திச் சடங்கு இடம்­பெற்­றது. அன்­றைய தினம் காலை முதல் இறுதிச் சடங்கு முடி­வ­டைந்து சட­லம் நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­டும் வரை­யில் , நான் மாணவி கல்வி கற்ற பாட­சா­லைக்கு அரு­ கில் பாது­காப்­புக் கட­மை­யில் ஈடு­பட்­டி­ருந்­தேன்.

அதன் பின்­னர் 17ஆம் திகதி மாலை எமது பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி குயிண்­டஸ் குணால் பெரேரா எம்மை புங்­கு­டு­தீ­வில் உள்ள நாதன் கடைக்கு முன்­பாக வரு­மாறு அழைத்­தார். அதனை அடுத்து நாம் அந்த இடத்­துக்­குச் சென்று இருந்­தோம்.
அந்­தக் கடை­யில் இருந்து சுமார் 400 மீற்­றர் தூரத்­துக்கு அப்­பால் உள்ள இடத்­துக்கு பொறுப்­ப­தி­காரி எம்மை வரச் சொன்­னார். நாம் அங்கு சென்ற போது மகா­லிங்­கம் சசி­த­ரன் , தில்­லை­நா­தன் சந்­தி­ர­கா­சன் , சிவ­தே­வன் துஷாந்த் , பழனி ரூப­சிங்­கம் குக­நா­தன் மற்­றும் ஜெய­த­ரன் கோகி­லன் ஆகிய 5 சந்­தே­க­ ந­பர்­க­ளை­யும் பொறுப்­ப­தி­கா­ரிக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லின் அடிப்­ப­டை­யில் கைது செய்­தோம். அவர்­க­ளைக் கைது செய்த போது அவர்­க­ளில் ஒரு சிலர் ஆல­யத்­துக்­குச் செல்­வ­தற்கு தயா­ரான நிலை­யில் வேட்­டி­யு­டன் மேலங்கி இல்­லா­மல் நின்று இருந்­தார்­கள். அவர்­கள் ஐவ­ரை­யும் ஒரே இடத்­தில் வைத்தே கைது செய்­தோம்.

சந்­தே­க­ந­பர்­க­ளின் நெருங்­கிய உற­வி­னர் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்
கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்­களை எமது பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்டு செல்­ல­வில்லை. ஏனெ­னில் சந்­தே­க­ந­பர்­க­ளில் ஒரு­வ­ரின் நெருங்­கிய உற­வி­னர் ஒரு­வர் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்­தில் கட­மை­யாற்­று­வ­த­னால் நாம் அவர்­களை பொலிஸ் நிலை­யம் கொண்டு செல்­லாது குறி­காட்டு­ வான் பொலிஸ் காவ­ல­ர­ணுக்கு விசா­ர­ணைக்­கா­கக் கொண்டு சென்­றோம்.
நாம் அவர்­களை குறி­காட்­டு­வான் பொலிஸ் காவ­ல­ர­ணுக்கு கொண்டு சென்று வாக்­கு­மூ­லங்­களை பெற முயற்­சிக்­கும் போது , ஊர­வர்­கள் ஒன்று திரண்டு ,சந்­தே­க­ந­பர்­க­ளைத் தம்­மி­டம் ஒப்­ப­டைக்­கு­மாறு கோரி காவ­ல­ர­ணைத் தாக்­கி­னார்­கள்.
அத­னால் எமது பொறுப்­ப­தி­காரி மேல் அதி­கா­ரி­க­ளின் கவ­னத்­துக்கு அதனை கொண்டு சென்று கடற்­ப­டை­யின் உத­வி­யு­டன் சந்­தே­க­ந­பர்­களை கடல் வழி­யாக நீருந்து விசை படகு (வோட்­டர் ஜெட்) மூலம் காரை­ந­கர் கடற்­ப­டைத் தளத்­துக்­குக் கொண்டு சென்று அங்­கி­ருந்து வட்­டுக்­கோட்டை பொலி­ஸா­ரின் உத­வி­யு­டன் சந்­தே­க­ந­பர்­களை யாழ்ப்­பா­ணத் தலைமை பொலிஸ் நிலை­யத்­துக்கு கொண்டு வந்­தோம்.
அன்­றைய தினம் இரவு சந்­தே­க­ந­பர்­கள் வாக்­கு­மூ­லம் அளிக்­கும் நிலை­மை­யில் இல்­லாத கார­ணத்­தால் அவர்­கள் ஓய்­வெ­டுக்க அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். நாம் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்­துக்­குத் திரும்­பி­விட்­டோம் என்று சாட்சியமளித்தார்.
பின்­னர் மறு­நாள் 18ஆம் திகதி அதி­காலை மீண்­டும் யாழ்ப்­பாண பொலிஸ் நிலை­யம் சென்று சந்­தே­க­ந­பர்­க­ளின் வாக்­கு­மூ­லங்­களை கோபி எனும் தமிழ் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரின் உத­வி­யு­டன் பெற்­றுக்­கொண் டேன்.
இதே­வேளை, இந்­தச் சாட்­சி தீர்ப்­பா­யம் முன்­னி­லை­யில் நேற்று சுமார் 6 மணித்­தி­யா­லங்­கள் சாட்­சி­ய­ம­ளித்­தார்.
இந்த வழக்­கின் 31ஆவது சாட்­சி­யான யாழ்ப்­பாண முன்­னாள் மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் லக்ஸ்­மன் வீர­சே­கர சாட்­சி­ய­ம­ளித்­தார்.
“2015ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி காலை 8.45 மணி­ய­ள­வில் என்னை யாழ்ப்­பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதி­பர் அலு­வ­ல­கத்­துக்கு வரு­மா­றும் அங்கு வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் வர­வுள்­ள­தா­க­வும் அறி­விக்­கப்­பட்­டது.
அதன் பிர­கா­ரம் நான் அங்கு சென்­றேன். அங்கு யாழ்ப்­பா­ணப் பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரும் யாழ்ப்­பாண பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரி­சோ­த­கர் சிறி­க­ஜ­னும் இன்­னும் சில பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் இருந்­தார்­கள்.
காலை 9 மணி­ய­ள­வில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதி­பர் லலித் ஜெய­சிங்க அங்கு வந்­தார். அவர் வந்து சில நிமி­டங்­க­ளில் சட்­டத்­துறை பீடா­தி­பதி தமிழ்­மா­ற­னும் அங்கு வந்­தார்.
பின்­னர் சட்ட பீடா­தி­பதி தமிழ்­மா­றன், வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரு­டன் சட்ட ஒழுங்­கு­கள் குறித்­துப் பேசி­னார். புங்­கு­டு­தீவு மாணவி படு­கொ­லைச் சம்­ப­வம் தொடர்­பி­லும் பேசி­னார். அதன்­போது இந்த சம்­ப­வத்­துக்கு சுவிஸ்­கு­மார் என்­ப­வர் பணம் வழங்­கி­ய­தா­க­வும் அங்கு பேசப்­பட்­டது. அத­னை­ய­டுத்து மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர், உப பொலிஸ் பரி­சோ­த­கர் இரானை அங்கு வரு­ மாறு அழைத்­தார். அங்கு இரா­னி­டம் சம்­ப­வம் தொடர்­பில் கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்­கள் தொடர்­பில் விவ­ரங்­களை அவர் கேட்­டார்.
சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளில் சுவிஸ்­கு­மார் என்­ப­வர் இல்லை. அந்­தச் சந்­தர்ப்­பத்­தில் சட்ட பீடா­தி­பதி தமிழ்­மா­றன், தன்­னால் சுவிஸ்­கு­மா­ரைப் பிடித்து தர முடி­யும் எனக் கூறி­னார். இரு பொலிஸ் அதி­கா­ரி­க­ளைத் தன்­னு­டன் அனுப்பி வைத்­தால் சுவிஸ்­கு­மா­ரைப் பிடித்து வர முடி­யும் என­வும் அவர் கூறி­னார். அதனை அடுத்து தமிழ்­மா­ற­னின் வெள்ளை நிற கப் ரக வாக­னத்­தில் உப பொலிஸ் பரி­சோ­த­கர் சிறி­க­ஜ­னும் மற்­று­மொரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரும் சென்­றி­ருந்­த­னர்.
அவர்­கள் சென்று 2 மணி நேரத்­துக்­குப் பின்­னர் என்னை தொலை­பேசி ஊடா­கத் தொடர்பு கொண்ட சிறி­க­ஜன், “சுவிஸ் நாட்­டைச் சேர்ந்த ஒரு­வ­ரைக் கைது செய்து இருக்­கின்­றோம். அவ­ரைக் கொண்டு வரு­வ­தற்கு வாகன ஒழுங்­கைச் செய்து தரு­மாறு” கோரி­னார்.
அது தொடர்­பில் நான் யாழ்ப்­பாண தலை­மைப் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரிக்கு அறி­வித்­தேன்”­என்று முன்­னாள் மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் சாட்­சி­ய­ம­ளித்­தார்.
தீர்ப்­பா­யம் சாட்­சி­யி­டம் கேள்வி எழுப்­பி­யது.
கேள்வி :- நீர் மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்­தானே ?
பதில் :- ஆம்.
கேள்வி :- சாத­ர­ண­மா­ன­வர்­க­ளுக்கே தெரி­யும், குற்­றச்­செ­யல் இடம்­பெற்ற அரு­கில் உள்ள பொலிஸ் நிலை­யத்­துக்­குத்­தான் அறி­விக்க வேண்­டும் என்று. அவ்­வாறு இருக்­கை­யில் நீர் ஏன் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்­துக்கு அறி­விக்­கா­மல் , யாழ்ப்­பாண பொலிஸ் நிலை­யத்­திற்கு அறி­வித்­தீர் ?

பதில்:- சந்­தே­க­ந­பர்­கள் தொடர்­பான விசா­ர­ணை­கள் ஊர்­கா­வற்­றுறை பொலி­ஸா­ரால் யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­ட­மை­யால் யாழ்ப்­பாண பொலிஸ் நிலை­யத்­துக்கு அறி­வித்­தேன். ஓய்­வு­பெற்ற மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் லக்ஸ்­மன் வீர­சே­கர தொடர்ந்து சாட்­சி­ய­ம­ளித்­தார்.
சிறிது நேரத்­தில் சிறி­க­ஜன் என்­னைத் தொலை ­பேசி ஊடா­கத் தொடர்பு கொண்டு தமக்கு வாக­னம் தேவை­யில்லை என­வும் கைது செய்த நப­ரு­டன் வாக­னம் ஒன்­றில் தாம் வந்து கொண்டு இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார்.
பிற்­ப­கல் 1 மணி அல்­லது 2 மணி இருக்­கும் சுவிஸ்­கு­மார் என்­ப­வரை உப பொலிஸ் பரி­சோ­த­கர் சிறி­க­ஜன் யாழ்ப்­பா­ணத்­துக்கு அழைத்து வந்­தி­ருந்­தார். நான் சுவிஸ்­கு­ மாரை யாழ்ப்­பாண பொலிஸ் நிலை­யத்­தில் முற்­ப­டுத்­து­மாறு அவ­ருக்­குப் பணித்­தேன்.
அதற்கு சிறி­க­ஜன் , “சுவிஸ்­கு­மார் என்­ப­வ­ருக்­கும் இந்த கொலைக்­கும் எந்த தொடர்­பும் இல்லை என தனக்கு ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரி­சோ­த­கர் இரான் கூறி­ய­தா­க­வும் , சுவிஸ் குமா­ருக்கு எதி­ராக சாட்­சி­யங்­கள் எது­வும் இல்­லாத நிலை­யில் அவரை பொலிஸ் நிலை­யத்­தில் முற்­ப­டுத்த முடி­யாது” எனவும் என்­னி­டம் கூறி­னார்.
அதற்கு நான் அவரை சந்­தே­க­ந­ப­ராக முற்­ப­டுத்­துங்­கள் எனக் கூறி­னேன். அவ்­வா­றும் முற்­ப­டுத்த முடி­யாது என சிறி­க­ஜன் கூறி­னார்.
இது தொடர்­பில் யாழ்ப்­பாண மாவட்­டப் பிரதி பொலிஸ்மா அதி­பர் பேரே­ரா­வுக்கு தொலை­பேசி ஊடாக அறி­வித்­தேன். அவர் சிறி­க­ஜனை தன்­னு­டைய அலு­வ­ல­கத்­துக்கு வரு­மாறு அழைத்­தார். அதனை அடுத்து அவ­ரது அலு­வ­ல­கத்­துக்கு சிறி­க­ஜன் சென்­றார்.
சிறிது நேரத்­தில் மீண்­டும் என்னை சந்­தித்த சிறி­க­ஜன் , “சாட்­சி­யம் இல்­லாத கார­ணத்­தால், சுவிஸ்­கு­மாரை பொலிஸ் நிலை­யத்­தில் முற்­ப­டுத்­தத் தேவை­யில்லை. அவ­ருக்கு சட்ட மருத்­துவ சோதனை விண்­ணப்­பம் வழங்கி, அவரை வைத்­தி­ய­சா­லை­யில் அனு­ம­திக்­கு­மாறு யாழ்ப்­பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதி­பர் எனக்­குப் பணித்­துள்­ளார்” என்று கூறி­னார்.
நான் உட­னேயே பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரைத் தொடர்பு கொண்டு அது தொடர்­பில் கேட்­டேன். “சுவிஸ்­கு­மா­ருக்­குக் காயங்­கள் இருக்­கு­மா­னால் அது தொடர்­பில் அவ­ரி­டம் விரி­வான வாக்­கு­மூ­லத்­தைப் பெற்று அவ­ருக்கு சட்ட மருத்­துவ சோதனை விண்­ணப்­பத்தை வழங்கி அனுப்­பு­மாறு வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ்மா அதி­பர் அறி­வு­றுத்­தல் வழங்­கி­னார்’’ என பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ஜி.கே.பெரேரா என்­னி­டம் தெரி­வித்­தார். அத­னைத் தொடர்ந்து பிர­திப் பொலிஸ்மா அதி­பர் கூறி­யது போன்றே நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நான் சிறி­க­ஜ­னி­டம் கூறி­னேன்.
அதன் பின்­னர் மறு­நாள் 19ஆம் திகதி புங்­கு­டு­தீவு சர்­வோ­தய மண்­ட­பத்­தில் நடை­பெற்ற கூட்­டத்­துக்கு சென்­றி­ருந்­தேன் அங்கு பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ஜி.கே.பெரேரா, வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் லலித் ஜய­சிங்க மற்­றும் சட்­டத்­து­றைப் பீடா­தி­பதி தமிழ்­மா­றன் ஆகி­யோர் அங்கு வந்­து உரையாற்றினார்கள்.
அப்­போது மக்­கள் சத்­த­மிட்­டார்­கள். நாங்­கள் பிடித்­துக்­கொ­டுத்த சுவிஸ்­கு­மாரை விடு­வித்­து­ விட்­டீர்­கள். பணம் வாங்­கிக்­கொண்­டு­தான் அவரை விடு­வித்­து­விட்­டீர்­கள் என அவர்­கள் கொதிப்­ப­டைந்­தார்­கள்.
அப்­போது , சந்­தே­க­ந­ப­ருக்கு எதி­ராக சாட்­சி­யங்­கள் எவை­யும் இல்லை. நீங்­கள் அந்­தச் சாட்­சி­யத்தை வழங்­கி­னால் அவரை மீண்­டும் கைது செய்­வ­தாக வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் லலித் ஜய­சிங்க கூறி­னார்.
அதன் போது அங்­கி­ருந்த அர­சி­யல்­வா­தி­யின் சகோ­த­ரர் ஒரு­வர் தான் சாட்­சி­யம் வழங்­கு­வ­தா­கக் கூறி­னார். அவ­ரது சாட்­சி­யம் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வ­ரால் பதிவு செய்ய கட்­ட­ளை­யி­டப்­பட்­டது.
அதன் பின்­னர் நானும் பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ஜி.கே.பெரே­ரா­வும் உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் ஆகி­யோர் வெளியே வந்து வெள்­ள­வத்­தைப் பொலிஸ் நிலை­யத்­துக்கு தொடர்பு கொண்­டோம். ஏனெ­னில் வெள்­ள­வத்­தைப் பகு­தி­யில் தான் சுவிஸ்­கு­மார் நிற்­ப­தாக கூட்­டத்­தில் இருந்­த­வர்­கள் கத்­தி­னார்­கள். அதன் கார­ண­மாக வெள்­ள­வத்­தைப் பொலி­ஸா­ருக்கு தொடர்பு கொண்டு சுவிஸ் குமார் கைது செய்­யப்­பட்­டமை குறித்­துக் கேட்­டோம். அவர்­கள் சுவிஸ்­கு­மா­ரைக் கைது செய்­து­விட்­ட­தா­கத் தெரி­வித்­த­னர்.
வெள்­ள­வத்­தை­யில் இருந்து சந்­தே­க­ந­பரை இங்கே கொண்­டு­வர நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ஜி.கே.பெரேரா என்­னி­டம் கூறி­னார்.
நான் எனது பிரத்­தி­யேக உத­வி­யா­ளர் தலை­மைப் பொலிஸ் பரி­சோ­த­க­ரு­டன் தொடர்பு கொண்டு, மானிப்­பாய் பொலிஸ் நிலை­யத் தின் வாக­னத்­தைக் கொண்டு யாழ்ப்­பாண பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரி­சோ­த­கரை ஆயு­தம் தாங்­கிய பொலி­ஸா­ரு­டன் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­துக்­குச் சென்று கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பரை இங்கே கொண்டு வரு­மாறு கூறி­னேன்.
சுவிஸ்­கு­மாரை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளு­மாறு ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலைய தலை­மைப் பொலிஸ் பரி­சோ­த­க­ருக்கு கூறி­னேன். ஆனால் அவர் அத­னைச் செய்­ய­வில்லை. அதன் பின்­னர் இது தொடர்­பாக எழுத்து மூல­மாக ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலைய தலை­ மைப் பொலிஸ் பரி­சோ­த­க­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­னேன். அப்­போ­தும் அவர் அத­னைச் செய்­ய­வில்லை. இதன்­பின்­னர் ஒழுக்க விசா­ரணை மேற்­கொள்­ளு­மாறு பிர­திப்­பொ­லிஸ்மா அதி­ப­ருக்கு எழுத்து மூல­மாக தெரி­வித்­தேன்.
பின்­னர் குற்­ற­வி­யல் நட­வ­டிக்கை சட்­டக்­கோ­வை­யின் 125ஆவது பிரி­வின் கீழ் எனக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் மற்­றும் பொலிஸ் பரி­சோ­த­கர் சிந்­தக்க பண்­டார உட்­பட ஆறு உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் இதனை பொறுப்­பெ­டுத்து மேற்­கொள்­ளு­மாறு கட்­டளை வழங்­கி­னேன். அவர்­க­ளால் சுவிஸ்­கு­மார் நீதி­வான் முன்­னி­லை­யில் 21ஆம் திகதி முற்­ப­டுத்­தப்­பட்­டார்”­என தனது சாட்­சி­யத்­தில் தெரி­வித்­தார்.
அதனை தொடர்ந்து எதி­ரி­கள் தரப்பு சட்­டத்­த­ர­ணி­க­ளின் குறுக்கு விசா­ர­ணை­கள் முடி­வ­டைந்த பின்­னர் ஓய்­வு­பெற்ற மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் லக்ஸ்­மன் வீர­சே­க­ர­வின் சாட்­சி­யம் முடி­வு­றுத்­தப்­பட்டு சாட்சி வழக்­கி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget