Ads (728x90)

யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீவு பாட­சாலை மாண­வி­யான சிவ­லோ­க­நாதன் வித்­தி­யாவின் கூட்­டு­ப்பா­லியல் வல்­லு­றவு படு­கொலை வழக்கின் பிர­தான சந்­தே­க­ந­ப­ரான சுவிஸ்­குமார் என்­ப­வரை வழக்கில் இருந்து தப்­பிக்க வைத்­தமை தொடர்பில் குற்றப் புல­னாய்வு பிரிவு பொலி­ஸாரால் தேடப்­பட்டு வரும் யாழ்.பொலிஸ் நிலை­யத்தின் உப பொலிஸ் பரி­சோ­த­க­ராக கட­மை­யாற்­றிய எஸ்.சிறி­க­ஜ­னுக்கு நாட்டை விட்டு வெளி­யே­று­வ­தற்கு தடை­வி­தித்து ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றம் கட்­டளை பிறப்­பித்­துள்­ளது.
குறித்த நபர் தப்பிச் செல்­வ­தற்கு உடந்­தை­யாக செயற்­பட்ட மற்­று­மொரு பொலிஸ் அதி­கா­ரி­யான உப பொலிஸ் பரி­சோ­தகர் எஸ்.சிறி­க­ஜனை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்ய முயற்­சித்த போதும் அவரை கைது செய்ய முடி­ய­வில்லை எனவும் அவர் தலை­ம­றை­வாக உள்­ள­தா­கவும் குற்றப் புல­னாய்வு பிரிவின் விசா­ரணை அதி­காரி ஐ.பி.நிஷாந்த சில்வா ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்­றுக்கு அறிக்­கை­யொன்றை நேற்­றைய தினம் சமர்­ப்பித்­துள்ளார்.
மேலும் குறித்த உப பொலிஸ் பரி­சோ­தகர் நாட்டை விட்டு வெளி­யே­றாத வகையில் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­தி­னூ­டாக தடை­யொன்றை பிறப்­பிக்­கு­மாறு குற்றப் புல­னாய்வு பிரிவு அதி­காரி மன்றை கோரி­யி­ருந்­தார். இவர்­க­ளது கோரி­க்­கையை பரிசீ­லித்த மன்­றா­னது குறித்த உப பொலிஸ் பரி­சோ­த­க­ரான எஸ்.சிறி­கஜன் நாட்டை விட்டு வெளி­யேற அனு­ம­திக்­க­க்கூ­டாது என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­திற்கு உத்­த­ர­விட்டு கட்­டளை பிறப்­பித்­துள்­ளது.
இதே­வேளை, இம் மாண­வியின் படு­ கொலை வழக்­கா­னது யாழ்.மேல் நீதி­மன் றில் ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் இடம்­பெற் று­வரும் நிலையில் இவ் வழக்கின் பிர­தான சந்­தே­க­ப­ராக இருந்த சுவிஸ்­குமார் என்­பவர் கடந்த 2015.05.18 அன்று யாழ்.பொலிஸ் நிலைய பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் குறித்த நபரை வழக்கில் இருந்து தப்ப வைக்கும் வகையில் விடு­தலை செய்­யப்­பட்டு கொழும்­புக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்தார்.
இதன்­பின்னர் சுவிஸ்­குமார் கொழும்பு வெள்­ள­வத்தை பகு­தியில் விடு­தி­யொன்றில் தலை­ம­றை­வா­கி­யி­ருந்த நிலையில் வெள்ளவத்தை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு பின்னர் இப் படு­கொலை வழக்கில் பிர­தான சந்­தே­க­ந­ப­ராக இணைக்­கப்­பட்டார். இந்­நி­லையில் குறித்த நப­ரான சுவிஸ்­கு­மாரை காப்­பாற்றும் வகையில் அவரை விடு­தலை செய்து அடைக்­கலம் கொடுத்தார் என்ற குற்­றச்­ச­சாட்டில் முன்னாள் வட­மா­காண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித்ஜயசிங்க கடந்த சனிக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget