Ads (728x90)

தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை முடி­வு­களை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் ஐந்தாம் திக­தி­ய­ளவில் வெளி­யி­டு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ள­தாக பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.
 கடந்த 20 ஆம் திகதி நடை­பெற்ற தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையின் விடைத்தாள் மதிப்­பீட்டுப் பணிகள் எதிர்­வரும் 31 ஆம் திகதி முதல் செப்­டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. 
மத்­திய நிலை­யங்கள் 40 இல் இடம் ­பெ­ற­வுள்ள மதிப்பீட்டுப் பணி­களில் 384 குழுக்­க­ளூ­டாக ஆறா­யி­ரத்து 965 ஆசி­ரி­யர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். 
எனவே மதிப்­பீட்டுப் பணிகள் நிறை­வ­டைந்த பின்னர் பரீட்சை முடி­வு­களை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் ஐந்தாம் திக­தி­ய­ளவில் வெளி­யி­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.
மேலும் இம்­முறை நடை­பெற்ற தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு மூன்று இலட்­சத்து 56 ஆயி­ரத்து 728 பேர் தோற்­றி­யி­ருந்­தனர்.இதேவேளை பரீட்சைக் கடமைகளில் 28 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget