Ads (728x90)

எல்.எம்.எஸ். கிரிக்கெட் என்று அழைக்­கப்­படும் லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் கிரிக்­கெட்டின் உலகக் கிண்ணத் தொட­ருக்­கான தெரிவுப் போட்­டிகள் நாளை ஆரம்­ப­மா­கின்­றன.
தென்­னா­பி­ரிக்­காவின் கேப்­ட­வுனில் இவ்­வ­ருடம் டிசம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள எல்.எம்.எஸ். உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொட­ருக்கு இலங்­கை­யி­லி­ருந்து பங்­கு­பற்றும் அணியை தெரி­வு­செய்யும் போட்டித் தொடரே நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு இங்­கி­லாந்தில் அறி­முகம் செய்­யப்­பட்­டி­ருந்த லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் கிரிக்கெட் போட்­டி­யா­னது சாதா­ரண கிரிக்­கெட்­டினை விட சற்று வித்­தி­யா­ச­மாக இருக்­கின்­றது. 
அணிக்கு 8 பேர் மாத்­தி­ரமே விளை­யா­டக்­கூ­டிய இவ்­வகை கிரிக்கெட் போட்­டியில் 7ஆவது விக்­கெட்­டினை தொடர்ந்து இறுதித் துடுப்­பாட்ட வீரர் தனி­யாக நின்று ஆட்­ட­மி­ழக்கும் வரை துடுப்­பாட முடியும். இத­னா­லேயே, இப்­போட்­டிகள் லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் (இறுதி மனிதர் வரை) என்று அழைக்­கப்­ப­டு­கின்­றது.
அனை­வ­ரையும் கவர்ந்­தி­ழுத்த இந்த விளை­யாட்­டா­னது, தொடர்ந்து உலகின் பல நாடு­க­ளிலும் உள்ள கிரிக்கெட் ரசி­கர்கள் மத்­தியில் பிர­பலம் ஆன­துடன், அதன் விளை­வாக தற்­போது பல நாடு­களில் வீரர்­களால் இவ்­வி­ளை­யாட்டு விரும்பி விளை­யா­டப்­பட்டு வரு­கின்­றது.
இந்த புது­வித கிரிக்­கெட்­டினை உல­கிற்கு அறி­முகம் செய்த இவ்­வி­ளை­யாட்டின் ஸ்தாப­கர்கள் தற்­போது இதற்­காக சர்­வ­தேச மட்­டத்­தி­லான தொடர்­களை நடத்தி வரு­கின்­றனர். 
அவ்­வ­கை­யான சுற்றுத் தொடர்­களில் ஒன்­றாக காணப்­படும், லாஸ்ட் மேன் ஸ்டான்ட் உலக சம்­பி­யன்ஷிப் தொடர் இரு வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை உலகின் பல நாடு­களில் இருந்து தெரிவு செய்­யப்­படும் அணி­களின் பங்­கு­பற்­று­த­லுடன் நடை­பெற்று வரு­கின்­றது.   
இவ்­வ­ரு­டத்­திற்­கான உலக சம்­பி­யன்ஷிப் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் தென்­னா­பி­ரிக்­காவின் கேப்­டவுன் நகரில் நடை­பெ­ற­வுள்­ளது. 
இம்­மு­றைக்­கான “லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் ஸ்ரீலங்கா” கிரிக்கெட் தொடரின் வெற்­றி­யா­ளர்கள் எதிர்­வரும் உலகக் கிண்ணத் தொடரில் பங்­கேற்பர்.
இத்­தொ­டருக்­கான அனு­ச­ர­ணையை “லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் ஸ்ரீலங்கா” வழங்­கு­கின்­றது. இப்­பந்­தய தொடரில் வெற்றி  பெறும் அணி­யா­னது 2017 ஆம் ஆண்­டிற்­கான லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் உலக சம்­பி­யன்ஷிப் தொடரில் பங்­கேற்க முடியும்.
உலகக் கிண்ணத் தொட­ருக்­கான தெரிவுப் போட்டித் தொடரில் இம்­முறை 30 அணிகள் போட்­டி­யி­டு­கின்­றன.
இந்தத் தொடரின் முதல் கட்ட போட்­டிகள் நாளை மத்­தே­கொட இரா­ணுவ மைதா­னத்தில் ஆரம்­ப­மா­கின்­றன. அதன்­பி­றகு எதிர்­வரும் மூன்றாம் திகதியும் 10ஆம் திகதியும் முதல்கட்டப் போட்டிகள் நடைபெறும்.
இந்தத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கொழும்பு மூர்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget