பொருத்து வீட்டுக்கு கொடுத்த விண் ணப்பங்களை மீளப்பெற்று, கல் வீட் டுக்கு மக்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 50 ஆயிரம் கல் வீடுகள் அமைக்குப் பணி விரைவாக நடைபெற வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
தேசிய ஒன்றிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக வடக்கு – கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
போர் முடிந்த 2009ஆம் ஆண்டு, வடக்கு – கிழக்கு மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யுமாறு அப்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரினோம். அவர் கைவிரித்து விட்டார்.
போர் முடிந்த 2009ஆம் ஆண்டு, வடக்கு – கிழக்கு மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யுமாறு அப்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரினோம். அவர் கைவிரித்து விட்டார்.
அதனால் இந்தியாவுக்குச் சென்ற கூட்டமைப்பு, அந்த நாட்டு அரசிடம் இதே கோரிக்கையை முன்வைத்தது. அதனை ஏற்றுக் கொண்டு இந்திய அரசு வடக்கு – கிழக்கில் 44 ஆயிரம் கல் வீடுகளை கட்டித் தந்துள்ளது.
இதன் பின்னரும் வடக்கு – கிழக்கில் வீட்டுத் தேவை இருந்தது. மீள்குடியேற்ற அமைச்சு 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைத்துத் தருவதாகத் தெரிவித்தது. இதில் ஒரு பொருத்து வீட்டுக்கான செலவில் 3 கல் வீடுகள் கட்ட முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினோம்.
பொருத்து வீட்டுக்கான செலவு குறைக்கப்பட்டது. ஆனால் அந்தப் பெறுமதியில்கூட இரண்டு வீடுகள் கட்ட முடியும் என்பதைத் தெரிவித்து பொருத்து வீட்டை எதிர்த்தோம்.
ஊழல் நிறைந்த பொருத்து வீட்டை மக்கள் ஏற்க்காவிட்டால் வீடே கிடைக்காது என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில்தான், வடக்கு – கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடு அமைக்கப்படவுள்ளதான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பொருத்து வீட்டுக்கு விண்ணப்பித்த மக்கள் அந்த விண்ணப்பங்களை மீளப் பெற்று கல் வீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்.
Post a Comment