Ads (728x90)

நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் மங்­க­ள­க­ர­மான வரவு – செலவுத் திட்டம் பல நிவா­ர­ணங்­களை கொண்­ட­தாக அமையும். ஆகவே அமைச்சர் மங்­க­ளவின் மங்­க­ள­க­ர­மான பட்­ஜெட்டை மக்கள் ஆர்­வத்­துடன் எதிர்­பா­ருங்கள் என வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.
அம்­பாந்­தோட்­டையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ மேலும் உரை­யாற்­று­கையில்,
தற்­போது நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் வீட­மைப்பு திட்­டத்­திற்கு பெரும் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு வரு­கின்­றன. வீட­மைப்பு செயற்­பா­டுகள் மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் முன்­னைய ஆட்­சியின் போது வீடுகள் நிர்­மா­ணிப்­ப­தற்கு எந்­த­வொரு வேலைத்­திட்­டமும் இருக்­க­வில்லை. மக்­களின் பணமும் உட­மை­களும் பெரு­ம­ளவில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டன.
வறுமைக் கோட்டின் கீழ் அப்­பாவி மக்­களின் வாழ்க்­கையை கட்­டி­யெ­ழுப்ப முன்­னைய ஆட்­சி­யி­ன­ருக்கு எந்­த­வொரு கொள்­கையும் திட்­டமும் இருக்­க­வில்லை. என்­றாலும் தன்­னு­டைய குடும்­பத்­தி­ன­ருக்கு மாத்­திரம் வீடு­களும் சொகு­சான வாழ்க்­கையும் பெற்­றுக் ­கொ­டுத்­தனர். ஆனால் அப்­பாவி மக்கள் வீதி­களில் துன்பம் கொண்­டனர். 
எனினும் நல்­லாட்சி அர­சாங்கம் வந்த பிறகு வீட­மைப்பு துறையை பலப்­ப­டுத்தி வாழ்­வ­தற்கு வச­தி­யில்­லாமல் வாடும் மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­க­ளையும் பெற்­றுக்­கொ­டுத்து வீடு­க­ளையும் வழங்கி வரு­கின்றோம். எனினும் எமது இரு வருட ஆட்­சியை இருள் சூழ்ந்­தது என கூறு­கின்­றனர். எனினும் முன்­னைய பத்து வரு­டங்­க­ளே இருள் சூழ்ந்த காலம் என்­ப­தனை மக்கள் நன்கு புரிந்து கொண்­டுள்­ளனர். 
அத்­துடன் அடுத்த வரு­டத்­திற்­கான வரவு – செல­வுத்­திட்­டத்தில் வீட­மைப்பு துறைக்கு மங்­கள சம­ர­வீர முக்­கி­யத்­துவம் வழங்­குவார் என்று எதிர்­பார்க்­கின்றேன். நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் மங்­க­ள­க­ர­மான வரவு – செலவுத் திட்டம் பல நிவா­ர­ணங்­களை கொண்டதாக அமையும். மேலும் முன்பு நாட்டின் வளங்களை மோசடி செய்த அரசியல்வாதிகளுக்கு  பாடமாக அமையும்.ஆகவே அமைச்சர் மங்களவின் மங்களகரமான பட்ஜெட்டை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பாருங்கள் என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget