சிறைச்சாலையில் தனி அறையில் அடைத்து வைத்தி ருப்பதால் நான் மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறேன்.” இவ்வாறு நீதிமன்றில் தெரிவித்தார், நீதிபதி இளஞ் செழியன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள முதன்மைச் சந்தேகநபரான ஜெயந்தன்.
யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கு யாழ்ப்பாண நீதிவான் மன்றில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. முதன்மைச் சந்தேகநபர் உள்ளிட்ட 3 சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களின் விளக்கமறியலை நீடித்து நீதிவான் வழக்கேட்டில் திகதியிட்டார்.
அப்போது ஜெயந்தன் கையை உயர்த்தி, “சிறைச்சாலையில் என்னைத் தனி அறையில் வைத்திருக்கின்றார்கள். அதனால் நான் மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறேன்” என்று தெரிவித்தார். தன்னைத் தனி அறையில் அடைக்க வேண்டாம் என்று கோருவதாக அவரது கோரிக்கை அமைந்தது. எனினும் நீதிவான் அவரது கோரிக்கையைப் பரிசீலிக்கவில்லை. அவர் உள்ளிட்ட மூவருக்கும் எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
நல்லூரடியில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் கேமரத்ன உயிரிழந்தார். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்தார்.
Post a Comment