Ads (728x90)

தொகு­தி­வாரி முறைமை 50 சத­வீ­த­மும், விகி­தா­ர­சா­ரப் பிர­தி­நிதித்­து­வம் 50 சத­வீ­த­மு­மா­கக் கொண்ட கலப்பு முறை­யி­லேயே மாகாண சபைத் தேர்­தல்­கள் நடத்­தப்­பட வேண்­டும் என்­றும், வேட்­பு­ம­னுத் தாக்­க­லின் போது 25 சத­வீ­தம் பெண் க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு வழங்க வேண்­டும் என­வும் மாகாண சபை­கள் தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரை­வில் நேற்­றுத் திருத்­தங்­கள் செய்­யப்­பட்டே நிறை­வேற்­றப்­பட்­டது.

60 சத­வீ­தம் தொகு­தி­வாரி முறை­யி­லும், 40 சத­வீ­தம் விகி­தா­சா­ரப் பிர­தி­நித்­துவ முறை­யி­லு­மாக அமைந்த கலப்பு முறை­யில் நாடா­ளு­மன்ற மற்­றும் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­கள் நடத்த ஏற்­க­னவே இணக்­கம் காணப்­பட்­டி­ருந்­தது.
இதே அடிப்­ப­டை­யி­லேயே மாகாண சபைத் தேர்­த­லை­யும் நடத்த ஏற்­பாடு செய்­யும் வகை­யில், மாகாண சபை­கள் தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரை­வில் சரத்­துக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இதற்கு அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்­கீம், ரிசாட் பதி­யு­தீன், மனோ கணே­சன் ஆகி­யோர் கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­த­னர். தலைமை அமைச்­சர் ரணி­லைச் சந்­தித்­துக் கடும் அழுத்­தங்­க­ளைப் பிர­யோ­கித்­தி­ருந்­த­னர்.
இத­னை­ய­டுத்து, 50 இற்கு 50 அடிப்­ப­டை­யில் கலப்பு முறை­யில் தேர்­தலை நடத்­தும் வகை­யில் சட்­ட­வ­ரை­வில் திருத்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget