Ads (728x90)

“20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரை­வின் சரத்­துக்­கள் அர­ச­மைப்­புக்கு முர­ணா­னவை என்று உயர் நீதி­மன்­றம் தமது வியாக்­கி­யா­னத்தை வெளி­யிட்­டி­ருந்த போதி­லும், அந்­தத் தீர்­மா­னத்­தில் உரிய கார­ணங்­கள் எது­வும் வழங்­கப்­பட்­டி­ருக்­கா­மை­யால் அது தொடர்­பில் உயர் நீதி­மன்­றி­டம் நாடா­ளு­மன்­றம் சார்­பில் விவ­ரம் கோரப்­பட வேண்­டும்”

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­தி­ரன் சபை­யில் வலி­யு­றுத்­தி­னார்.
நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற மாகாண சபைத் தேர்­தல்­கள் திருத்­தச் சட்­ட­வ­ரை­வின் மீதான விவா­தத்­தில் உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
அர­ச­மைப்­பின் 123ஆம் உறுப்­பு­ரை­யின் கீழேயே உயர் நீதி­மன்­றம் அத­னது நியா­யா­திக்­கத்தை செயல்­ப­டுத்­து­கின்­றது. உயர் நீதி­மன்­றத்­தின் தீர்­மா­ன­மா­னது கார­ணங்­க­ளு­டன் அமைந்­த­தாக இருக்க வேண்­டும். அனுப்­பி­ வைக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தில் கார­ணங்­களை அறிந்து கொள்­வ­தில் சிர­மம் என்­றால் நாம் உயர் நீதி­மன்­றத்­தி­டம் விவ­ரம் கோர வேண்­டும்.

தீர்­மா­னத்­தில் கார­ணங்­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தாலே தவிர, தேவை­யான திருத்­தங்­களை மேற்­கொள்­வது நாடா­ளு­மன்­றத்­துக்கு சாத்­தி­ய­மாக இருக்­காது.
யாது­மொரு சட்­ட­வ­ரைவு மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ரவு வாக்­கு­க­ளால் நிறை­வேற்­றப்­பட்டு பொது வாக்­கெ­டுப்­பொன்­றில் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டும் எனில், அர­ச­மைப்­புக்கு முர­ணா­கக் காணப்­ப­டும் அந்­தச் சட்­ட­வ­ரை­வின் சரத்­துக்­க­ளில் அர­ச­மைப்­புக்கு இணங்­கும் வகை­யில் மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டிய திருத்­தங்­க­ளின் இயல்­பை­யும் உயர் நீதி­மன்­றம் குறிப்­பிட வேண்­டும் என்று அர­ச­மைப்­பின் 123(2)(இ) உறுப்­பு­ரை­யில் தெளி­வா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உயர் நீதி­மன்­றத்­தின் இந்­தத் தீர்­மா­னத்­தில் கார­ணங்­கள் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்­ப­து­டன் மட்­டு­மல்­லாது, நீதி­ய­ர­சர்­கள் குழா­மின் இரு அங்­கத்­த­வர்­க­ளது இணக்­கத்­து­ட­னும், ஒரு உறுப்­பி­ன­ரது இணக்­க­மின்­றி­யும் அந்த நீதி­ய­ர­சர்­க­ளது பெயர்­க­ளைக் கூடக் குறிப்­பி­டாது இந்­தத் தீர்­மா­னம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மல்­லாது, நீதி­ய­ர­சர் ஒரு­வர் இணங்­கா­மைக்­கான கார­ணம்­கூட தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இங்கு கார­ணங்­கள் குறிப்­பி­டப்­ப­டா­தது துர­திஷ்­ட­வ­ச­மா­னது. திருத்­தங்­க­ளும் பரி­சீ­லக்­கப்­ப­ட­வில்லை. நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளில் நாடா­ளு­மன்­றம் தலை­யிட முடி­யாது என்­பதை நான் ஏற்­றுக்­கொள்­கி­றேன். அனுப்­பி­வைக்­கப்­பட்ட விட­யங்­கள் மதிக்­கப்­பட வேண்­டும். இந்த விட­யத்­தில் முன்­செல்­ல­வ­தில்லை என்று அர­சும் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது.

அது நாடா­ளு­மன்­றத்தை சிர­ம­மான நிலை­மைக்­குள் தள்­ளி­யுள்­ளது. ஆட்­சே­பத்­துக்­கு­ரிய சரத்­துக்­கள் எவை, அவை எவ்­வாறு திருத்­தப்­பட வேண்­டும் என்­பதை நாடா­ளு­மன்­றம் தெரிந்­து­கொள்ள வேண்­டும் – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget