Ads (728x90)

ஜெனிவா மனித உரிமை பேர­வையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை  தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு  மேலும் இரண்டு வருட கால அவ­காசம் வழங்கும்  34-1 என்ற பிரே­ர­ணையை  அமுல்­ப­டுத்த இலங்கை  தொடர்ந்து நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று   பிரிட்டன் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.  
ஜெனி­வாவில் நடை­பெற்­று­வ­ரு­கின்ற ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத்  தொடரின் நேற்­றைய அமர்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய  ஜெனி­வா­வுக்­கான பிரிட்டன் பிர­தி­நிதி     மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 
அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், 
காணாமல் போனோர்  தொடர்பில்  ஆராயும் நோக்கில்  காணாமல் குறித்த அலு­வ­ல­கத்தை நிய­மிப்­ப­தற்கு  அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ள  அர­சாங்­கத்தின்  செயற்­பாட்டை வர­வேற்­கின்றோம்.   
மேலும் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை  தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு  மேலும் இரண்டு வருட கால அவ­காசம் வழங்கும்  34-1 என்ற பிரே­ர­ணையை  அமுல்­ப­டுத்த இலங்கை  தொடர்ந்து நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று   அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றோம் என்றார்.  
இலங்­கை­யா­னது  விசேட நீதிப்­பொ­றி­மு­றையை முன்­னெ­டுத்து  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்தி 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையில்  பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. 
30-1 என்ற  அந்தப் பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.    இந்­நி­லையில்  இந்த வருடம் மார்ச் மாதம்  குறித்த பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்த இலங்­கைக்கு மேலும் இரண்டு வருடம்  கால அவ­காசம் வழங்கும் வகையில்  34 -  1  என்ற புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அந்த பிரேரணையை  நிறைவேற்ற தொடர்ச்சியாக நடவடிக்கை  எடுக்குமாறே    பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget