
வடகொரியாவின் ஏவுகணை மிரட்டலுக்கு பதிலடியாக கூடுதல் பொருளாதார தடைகளை விதிப்பது பற்றி அமெரிக்காவும் தென் கொரியாவும் ஆலோசித்துள்ளன. இது தொடர்பாக அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹை தொலைபேசியில் பேசியுள்ளதாக சியோலில் அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வட கொரியாவுக்கு எதிராக ஏற்கனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பிறப்பித்துள்ள தடைகளை அமல்படுத்த சர்வதேச நாடுகளுக்கு அழுத்தம் தருவது பற்றியும் இருதலைவர்களும் விவாதித்துள்ளனர்.
கடந்த வெள்ளியன்று வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானுக்கு மேலே சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரம் பறந்து பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது. இந்த ஏவுகணை மொத்தம் 3,700 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள அமெரிக்காவின் குவாம் தீவை தாக்க இதுபோதும் என்பதால் அமெரிக்கா கவலை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment