
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐ.நா.சபை சம்மந்தமான பல்வேறு கூட்டங்களில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் விமான நிலையத்தில் அவரை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சிங் சர்னா, ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி சையத் அக்பருதீன் ஆகியோர் வரவேற்றனர். ஒரு வார பயணத்தில் ஐ.நா.சபை சார்ந்த பல்வேறு கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்று இந்தியா சார்பில் சுஷ்மா கருத்துகளை எடுத்துரைக்கவுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமை வகிக்கும் ஐ.நா. சீர்திருத்தங்கள் தொடர்பான கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளார். இன்று மாலை சுஷ்மா அமெரிக்கா வெளியுறவு செயலர் ரெக் ரில்லருடன், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தாரோ கோனோ சந்தித்து பேசவுள்ளார். மேலும் செப்டம்பர் 23-ம் தேதி ஐ.நா. பொதுக்கூட்ட அரங்கில் சுஷ்மா உரையாற்றுகிறார்.
Post a Comment