Ads (728x90)

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாகிவிட்டார். அவர் நடித்து முடித்த மூன்று படங்கள் ரிலீஸ்க்கு ரெடியாகியும் இன்னும் ரிலீஸாகாமல் தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஒருவருடன் கைகலப்பில் இறங்கி, சிக்கலில் மாட்டியிருக்கிறார். அது பற்றிய விபரம் வருமாறு...

நடிகர் சந்தானத்துக்கும், சண்முகசுந்தரம் என்ற கட்டுமான நிறுவனருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சண்முகசுந்தரம் தரப்பில் அவருக்கு ஆதரவாக பிரேம் ஆனந்த் என்ற வக்கில் பேசியிருக்கிறார். இதில் கைகலப்பு ஏற்பட சந்தானம், பிரேம் மற்றும் சண்முகசுந்தரத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் காயம் அடைந்துள்ளனர். பிரேம் ஆன்ந்த்திற்கு மூக்கில் காயம் ஏற்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேப்போன்று சந்தானத்திற்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வக்கில் பிரேம் ஆனந்த், சென்னை வளசரவாக்கம் போலீஸில் சந்தானம் மீது புகார் கொடுத்துள்ளார். சந்தானம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தானமும், சண்முக சுந்தரம் மற்றும் பிரேம் ஆனந்த் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பிரேம் ஆனந்த், பா.ஜ.வின் தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் என்று கூறப்படுகிறது. அதனால் சந்தானத்தை கைது செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிக்கலில் மாட்டியிருக்கிறார் சந்தானம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget