Ads (728x90)

இந்­திய பிர­தமர் ஸ்ரீ நரேந்­திர மோடியின் இலங்கை வரு­கை­யின்­போது அவர் அறி­வித்த மலை­யக மக்­க­ளுக்­கான பத்­தா­யிரம் வீட்­டுத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ர­கத்­துக்கும் தமது அமைச்­சுக்கும் இடையில் விரைவில் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபி­வி­ருத்தி அமைச்சர் பழனி திகாம்­பரம் தெரி­வித்­துள்ளார்.

இந்­திய துணைத்­தூ­துவர் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் அமைச்­ச­ருக்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று அமைச்சில் இடம்­பெற்­றது. அமைச்சர் பழனி திகாம்­ப­ரத்­துடன், அமைச்சின் செய­லாளர் ரஞ்­சனி நட­ரா­ஜ­பிள்ளை, நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.தில­கராஜ், மத்­தி­ய­ மா­காண சபை உறுப்­பினர் எம்.உத­ய­குமார்  இந்­திய தூதுக்­குழு சார்­பாக துணை உயர்ஸ்­தா­னிகர் அரிந்தாம் பக் ஷி, இணைச்­செ­ய­லாளர் அமித் குமார், முதன்மைச் செய­லாளர் திரு­மதி சுஜா மேனன், தூத­ரக அதி­காரி தாஸ் ஆகியோர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர்.

கடந்த பல வரு­டங்­க­ளாக கிடப்பில் போடப்­பட்­டி­ருந்த இந்­திய வீட­மைப்­புத்­திட்­ட­மா­னது  நல்­லாட்சி அரசில் அமைச்சர் திகாம்­பரம் பெருந்­தோட்ட

உட்­கட்­ட­மைப்பு அமைச்சை பொறுப்­பேற்­ற­வுடன் நடை­மு­றைக்கு கொண்டு வரப்­பட்­ட­துடன் தற்­போது முதல் கட்­ட­மாக 1134 வீடுகள் கட்­டப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

இரண்­டா­வது கட்­ட­மாக 2866 வீடு­க­ளுக்­கான கட்­டு­மா­னப்­ப­ணிகள் எதிர்­வரும் ஜன­வரி முதல் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில், இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை விஜ­யத்­தின்­போது நோர்வூட் மைதா­னத்தில் மலை­யக மக்­களை சந்­தித்து அவர் அறி­வித்த 10000 வீடு­களை அமைப்­ப­தற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் ஒன்றை மேந்­கொள்­வ­தற்­கான ஆரம்ப கட்ட கலந்­து­ரை­யா­ட­லா­கவே நேற்றைய சந்­திப்பு இடம்­பெற்­றது.

கிடப்பில் போடப்­பட்­டி­ருந்த திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­மைக்­காக அமைச்­சருக்கு நன்றி தெரி­வித்த இந்­திய தூது­க்குழு எதிர்­வரும் மூன்­றாண்டு காலப்­ப­கு­திக்குள் இந்­திய வீட­மைப்­புத்­திட்­டத்தின் எஞ்­சிய 10000 வீடு­க­ளையும் அமைக்கும் திட்­டத்­திற்கு பணி­களைத் தயார் செய்­யு­மாறும் அது­தொ­டர்­பான மேல­திக உத­வி­களை வழங்­கு­வ­தற்கு இந்திய அர­சாங்கம் தயா­ராக இருப்­ப­தா­கவும் தெரி­வித்­தனர்.

ஏற்­க­னவே 10000 வீடு­களை அமைப்­ப­தற்­காக திட்­ட­மிடல் திணைக்­க­ளத்­தி­னதும் முகா­மைத்­துவ குழு­வி­னதும் அனு­மதி கிடைத்­துள்ள அதே­வேளை இதற்­கான அமைச்­ச­ரவை பத்­திரம் விரைவில் சமர்ப்­பிக்­கப்­படும் என்றும் அத­னைத்­தொ­டர்ந்து இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்­துடன் அமைச்சு புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­திட்டு வேலைத்­திட்­டத்தை ஆரம்­பிக்கும் என்றும் அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget