Ads (728x90)

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­ கி­ணைப்புக் குழுக் கூட்டம் நாளை சனிக்­கி­ழமை மாலை 6 மணிக்கு கொழும்பில் உள்ள எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

குறிப்­பாக இடைக்­கால அறிக்கை தொடர்பில் ஆராய்­வ­தற்கு பாரா­ளு­மன்றக் குழு கூட்­டத்­தினை கூட்­டு­வ­தற்கு  முன்­ன­தாக ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்­டத்­தினை  கூட்டி கூட்­ட­மைப்­பாக கொள்கை ரீதி­யான தீர்­மா­ன­மொன்றை மேற்­கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப்.வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­தோடு கடந்த 19மற்றும் 20ஆம் திக­தி­களில் பாரா­ளு­மன்­றத்தில் உள்ள எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில்  நடை­பெ­ற­வி­ருந்த பாரா­ளு­மன்­றக்­குழு கூட்­டத்தில் பங்­கேற்­கப்­போ­வ­தில்லை எனவும் அறி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில்  ஐ.நா.விசேட அறிக்­கை­யா­ளரின் பாரா­ளு­மன்ற வருகை மற்றும் அர­சி­ய­ல­மைப்பு குறித்த சந்­திப்­புக்கள் இருந்­ததன் கார­ண­மாக கடந்த 19மற்றும் 20ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வி­ருந்த பாரா­ளு­மன்றக் குழக் கூட்டம் ஒத்­த­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அவ்­வா­றான நிலை­யி­லேயே தற்­போது மேற்­படி ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்­டத்­திற்­கான அறி­விப்பு விடுக்­கப்­பட்­டள்­ளது. இக்­கூட்­டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். உட்­பட பங்­கா­ளிக்­கட்­சி­க­ளான புளொட், ரெலோ ஆகி­ன­வற்றின் பிர­தி­நி­திகள் கலந்து கொள்­ள­வுள்­ள­மையை அவ்­வ­மைப்­புகள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.

இதே­வேளை எதிர்­வரும் (28, 29) சனி மற்றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் காலை 9.30மணி முதல் மாலை 4 மணி­வ­ரையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழவின் இடைக்­கால அறிக்கை தொடர்­பான கருத்­த­ரங்கு நடை­பெ­ற­வுள்­ளது.

இக்­க­ருத்­த­ரங்கில் பங்­கேற்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் 16பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது இடைக்­கால அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்கள் குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு காணப்­படும் சந்­தே­கங்கள், புதி­தாக இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய விட­யங்கள் குறித்த யோச­னைகள் போன்­ற­வற்றை முன்­வைக்க முடியும் எனவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­க­ருத்­த­ரங்கில் அர­சி­ய­ல­மைப்புச் செயற்­பா­டு­களில் பங்­கேற்­றுள்ள தமிழ் மொழி சார் சட்­டத்­த­ர­ணிகள் சிலர் பங்­கேற்று விளக்க உரை­களை ஆற்­ற­வுள்­ள­தா­கவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் வழி­ந­டத்தல் குழு உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் அறிக்கை குறித்த மேல­திக தௌிவு படுத்­தல்கள் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்­பா­கவும் விளக்­க­ம­ளிக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதே­நேரம் குறித்த இரு நாள் கருத்­த­ரங்கில் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.பங்­கேற்­கப்­போ­வ­தில்லை என அறி­வித்­துள்­ளது. துமது கட்சி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தினை மைய­மாக வைத்து தீர்­மா­னத்­தினை எடுத்­துள்ள நிலை­யிலும் இடைக்­கால அறிக்கை குறித்து ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்த்தில் ஏகோபித்த தீர்மானமொன்று எட்டப்படாத நிலையிலும் இத்தகைய கருதரங்கில் பங்கேற்பதால் பயன் எதுவும் ஏற்படப்போவதில்லை எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்புக் குறித்த வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் 30, 31 மற்றும் நவம்பர் முதலாம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget