Ads (728x90)

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என்று கருதப்படும் நிறுவனம் ஒன்றின் முன்னாள் பணிப்பாளர் இரேசா சில்வா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து நாடு திரும்பிய வேளையில் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ தெளி­வு­ப­டுத்த முடி­யாத வழி­களில் சம்­பா­தித்­த­தாக கூற­ப்படும் 30 மில்­லியன் ரூபாவை வரை­ய­றுக்­கப்­பட்ட கவர்ஸ் கோப்­ரேஷன் சேர்­விசர்ஸ் தனியார் நிறு­வனம் ஊடாக கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள,அவ­ரது செய­லா­ள­ராக கரு­தப்­படும் பட்­ட­பொல ஆரச்­சிகே ஒரெ­னெலா இரேஷா சில்வா அபு­தா­பியில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு குற்றச்சாட்டில் பிர­தி­வா­தி­யாக கரு­த­ப்படும் மேற்­படி நாமலின் செய­லா­ள­ரான யுவதி, தொடர்ச்­சி­யாக நீதி­மன்றை புறக்­க­ணித்து வந்த நிலையில் அவ­ருக்கு எதி­ராக பிறப்­பிக்­கப்பட்­டி­ருந்த சிவப்பு அறி­வித்தல் பிர­காரம் இவ்­வாறு அபு­தா­பியில் வைத்து அந் நாட்டு பொலிஸாரால் கைது செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும் இந்நிலையில் அவர் இன்று  முற்­பகல் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­ப­ட்டதையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் முதலாம் திக­திக்கும் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் கொழும்பில் வைத்து, முறைப்­பாட்­டாளர் தரப்பு அறி­யாத பல­ருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி உழைக்­கப்பட்ட விதத்தை தெளி­வு­ப­டுத்த முடி­யாத வகையில் 30 மில்­லியன் ரூபாவை சம்­பா­தித்தன் ஊடாக கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழ் குற்றம் ஒன்­றினை புரிந்­தமை, அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை உள்­ளிட்ட 11 குற்றச் சாட்­டுக்­களின் கீழ் நாமல் ராஜ­பக்ஷ உள்­ளிட்ட ஆறு பேருக்கு எதி­ராக சட்ட மா அதி­பரால் கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கில் நான்காம் பிர­தி­வாதி தற்­போது அபு­தா­பியில் கைது செய்­யப்பட்­டு இன்று முற்பகல் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டபோது குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட பட்­ட­பொல ஆரச்­சிகே ஒரெ­னெலா இரேஷா சில்வா  ஆவார்.

இவர் குறித்த சர்ச்­சைக்­கு­ரிய வரை­ய­றுக்­கப்பட்ட கவர்ஸ் கோப்ரட் சேர்விஸ் தனியார் நிறு­வ­னத்தின் பங்­கு­தா­ர­ரா­கவும், பணிப்­பாளர் சபை உறுப்­பி­ன­ரா­கவும் செயற்­பட்­டுள்­ள­துடன் அந் நிறு­வ­னத்தின் செய­லா­ள­ரா­கவும் பதவி வகித்­த­தாக நிதிக் குற்றப் புல­ன­யவுப் பிரிவு விசா­ர­ணைகள் ஊடாக கண்­ட­றி­யப்பட்­டி­ருந்­தன.

இது தொடர்பில் இரேஷா சில்வா தேடப்பட்டு வந்த நிலை­யி­லேயே, சிவப்பு அறி­வித்தல் பிரகாரம் அபு­தா­பியில் கைது செய்­யப்பட்­டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இத­னி­டையே எச்.சி.129/17 எனும் இலக்­கத்தின் கீழ் விசா­ரிக்­கப்பட்டு வரும் இந்த கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு வழக்கும் இன்று கொழும்பு 7 ஆம் இலக்க மேல் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

இரேஷா சில்­வாவுக்கு மேல­தி­க­மாக இந்த கவர்ஸ் கோப்­ரடிஸ் சேர்­விசஸ் வழக்கில் முதல் பிர­தி­வா­தி­யாக நாமல் ராஜ­பக்ஷ பெய­ரி­டப்பட்­டுள்ள நிலையில் 2ஆம் 3 ஆம் பிரதிவாதிகளாக முறையே இந்திக பிரதாப் கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம ஆகியோரும் 5 ஆம் பிரதிவாதியாக  நித்திய சேனானி சமரநாயக்கவும் 6 ஆவது பிரதிவாதியாக வரையறுக்கப்பட்ட கவர்ஸ் கோப்ரடீஸ் சேர்விசஸ் தனியார் நிறுவனமும் பெயரிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget