
டுபாயில் இருந்து நாடு திரும்பிய வேளையில் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெளிவுபடுத்த முடியாத வழிகளில் சம்பாதித்ததாக கூறப்படும் 30 மில்லியன் ரூபாவை வரையறுக்கப்பட்ட கவர்ஸ் கோப்ரேஷன் சேர்விசர்ஸ் தனியார் நிறுவனம் ஊடாக கறுப்புப் பண சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள,அவரது செயலாளராக கருதப்படும் பட்டபொல ஆரச்சிகே ஒரெனெலா இரேஷா சில்வா அபுதாபியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கறுப்புப் பண சுத்திகரிப்பு குற்றச்சாட்டில் பிரதிவாதியாக கருதப்படும் மேற்படி நாமலின் செயலாளரான யுவதி, தொடர்ச்சியாக நீதிமன்றை புறக்கணித்து வந்த நிலையில் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவித்தல் பிரகாரம் இவ்வாறு அபுதாபியில் வைத்து அந் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் அவர் இன்று முற்பகல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கும் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பில் வைத்து, முறைப்பாட்டாளர் தரப்பு அறியாத பலருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி உழைக்கப்பட்ட விதத்தை தெளிவுபடுத்த முடியாத வகையில் 30 மில்லியன் ரூபாவை சம்பாதித்தன் ஊடாக கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்தமை, அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை உள்ளிட்ட 11 குற்றச் சாட்டுக்களின் கீழ் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நான்காம் பிரதிவாதி தற்போது அபுதாபியில் கைது செய்யப்பட்டு இன்று முற்பகல் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டபோது குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட பட்டபொல ஆரச்சிகே ஒரெனெலா இரேஷா சில்வா ஆவார்.
இவர் குறித்த சர்ச்சைக்குரிய வரையறுக்கப்பட்ட கவர்ஸ் கோப்ரட் சேர்விஸ் தனியார் நிறுவனத்தின் பங்குதாரராகவும், பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளதுடன் அந் நிறுவனத்தின் செயலாளராகவும் பதவி வகித்ததாக நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவு விசாரணைகள் ஊடாக கண்டறியப்பட்டிருந்தன.
இது தொடர்பில் இரேஷா சில்வா தேடப்பட்டு வந்த நிலையிலேயே, சிவப்பு அறிவித்தல் பிரகாரம் அபுதாபியில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இதனிடையே எச்.சி.129/17 எனும் இலக்கத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இந்த கறுப்புப் பண சுத்திகரிப்பு வழக்கும் இன்று கொழும்பு 7 ஆம் இலக்க மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இரேஷா சில்வாவுக்கு மேலதிகமாக இந்த கவர்ஸ் கோப்ரடிஸ் சேர்விசஸ் வழக்கில் முதல் பிரதிவாதியாக நாமல் ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ள நிலையில் 2ஆம் 3 ஆம் பிரதிவாதிகளாக முறையே இந்திக பிரதாப் கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம ஆகியோரும் 5 ஆம் பிரதிவாதியாக நித்திய சேனானி சமரநாயக்கவும் 6 ஆவது பிரதிவாதியாக வரையறுக்கப்பட்ட கவர்ஸ் கோப்ரடீஸ் சேர்விசஸ் தனியார் நிறுவனமும் பெயரிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment