
நாடாளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை மாநகர, நகர, பிரதேச திருத்தச்சட்ட வரைவு இரண்டாம் வாசிப்புக்காக விவாதத்திற்காக எடுக்கப்பட்டது.
விடயத்துக்குப் பொறுப்பான மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபா சட்டவரைவை சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.
சுமார் ஒரு மணித்தியாங்களுக்கு உள்ளாகவே ஆளும் எதிர்த் தரப்பின் விவாதம் நடைபெற்றது. வாக்கெடுப்பு இன்றி திருத்தங்க ளுடன் சட்டவரைவு நிறைவேற் றப்படுவதற்கு சபை அனுமதியளித்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக, நடைமுறையில் உள்ள மாநகர, நகர, பிரதேச கட்டளைச் சட்டங்களே திருத்தப்பட்டு நேற்று நிறைவேற்றப்பட்டன.
Post a Comment