
இந்நிலையில் நேற்று காலை அசார் அலி 85 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் விக்கெட்கள் ஒருபுறம் அடுத்தடுத்து விழுந்தாலும் மறுபுறம் உறுதியாக நின்று பேட்டிங் செய்த ஹாரிஸ் சோகைல் 161 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர் களுடன் 76 ரன்களைக் குவித்தார். இதனால் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 422 ரன்களைக் குவித்து ஆட்டம் இழந்தது. இலங்கை அணியில் ஹெராத் 93 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இலங்கையின் 2-வது இன்னிங்ஸில் கருணாரத்னே 10, குஷால் சில்வா 25, திருமன்னே 7, சந்திமால் 7 ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இதனால் நேற்று ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்களை எடுத்திருந்தது. மெண்டிஸ் 16 ரன்களுடனும், லக்மால் 2 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும்.
Post a Comment