
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. குஜராத்தின் வதோதராவில் நேற்றுமுன்தினம் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார்.
பங்கேற்றபாளர்கள் ராகுல் காந்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். இலங்கையில் இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்ததை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்றும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, ‘‘பிரபாகரனின் சடலத்தைப் பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனையடைந்தோம். பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதால் துயரமடைந்தேன். மற்றவர்களின் துயரங்களில் பங்குகொள்வதுதான் காந்தி குடும்பத்தின் பாரம்பரியம்’’ என்று குறிப்பிட்டார்.
Post a Comment