Ads (728x90)

இலங்கையின் கடற்கரைப் பிரதேசத்தில் கடல் அலை எரிசக்தி உற்பத்திக்கு உதவி வழங்குவதற்குத் தாம் தயார் என்று பின்லாந்தின் ஏடபிள்யூ எரிசக்தி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜோன் லியெலெயுன்ட் தெரிவித்தார்.

உலகின் நவீன புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தி ஊடகமான கடல் அலை மூலமான சக்தி உற்பத்தி தொடர்பாக அறிந்து கொள்வதற்காக, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், பின்லாந்தின் ஹெல்சிங்கி நகர ஏடபிள்யூ எரிசக்தி நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் சென்றனர்.

அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையைச் சூழவுள்ள கடற்கரைப் பிரதேசங்களில் ஆரம்ப ஆய்வுப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன. எதிர்வரும் வருடத்தில், இலங்கையில் கடல் அலை எரிசக்தியை உற்பத்தி செய்யும் பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பார்க்கின்றோம் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget