உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிறிப் யாழ்ப்பாணத்துக்கு நாளை வெள்ளிக்கிழமை வருகிறார்.ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ 13 நாள்கள் பயணமாக, இலங்கையை நேற்று முன்தினம் வந்தடைந்தார்.
இலங்கையின் நிலமைகள் தொடர்பாக மீளாய்வு செய்து, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அவர் அறிக்கை சமர்ப்பிப்பார். வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வரும் அவர் பொது அமர்வு ஒன்றிலும் பங்கேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment