Ads (728x90)

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளில் சட்­டடி­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய கைதி­கள் தவிர்ந்த, ஏனைய கைதி­களை உட­ன­டி­யாக விடு­விக்­கு­மாறு சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்கு அரசு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

அங்கு நில­வும் தாம­தம் கார­ண­மா­கவே கைதி­க­ளின் விடு­தலை பிரச்­சி­னை­யா­ கின்­றது. இவ்­வாறு அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ள­ரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தார்.

அரச தக­வல் திணைக்­க­ளத்தில் அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது. அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத் துள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் வழக்­கு­களை மீண்­டும் வவு­னியா நீதி­மன்­றத்துக்கு இட­மாற்­றம் செய்­வது என்­பன தொடர்­பில் செய்­தி­யா­ளர்­கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு அமைச்­சர் பதி­ல­ளித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
சிறை­யி­லுள்ள தமிழ்க் கைதி­கள் விரை­வாக விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்­டும் என்­பதே அர­சின் நிலைப்­பாடு. சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்­கு­க­ளைத் தொட­ரு­மாறு அரசு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

15 வரு­டங்­க­ளுக்கு அதி­க­மாக தமிழ்க் கைதி­கள் சிறை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­க­ளின் வாழ்­வின் பாதிக்­கா­லம் வீணா­கி­விட்­டது. இவர்­களை விடு­விக்­கு­மாறு நான் பல தட­வை­கள் கோரிக்கை விடுத்­துள்­ளேன்.
குற்­ற­மற்­ற­வர்­க­ளைத் தடுத்­து­வைத்­தல் நியா­ய­மான செயற்­பா­டல்ல. இதற்கு விரை­வில் தீர்வு காண நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்.

மக்­கள விடு­தலை முன்­ன­ணி­யின் வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் கைது செய்­யப்­பட்டு விடு­த­லை­யா­ன­வர்­கள் கடந்த காலங்­க­ளில் மீண்­டும் வன்­மு­றை­க­ளில் ஈடு­பட்­ட­தைக் காண­மு­டிந்­தது.

ஆனால், மறு­வாழ்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­பின் முன்­னாள் உறுப்­பி­னர்­கள் இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­ட­னர் எனத் தக­வல் இல்லை – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget