மானிப்பாய் லோட்டன் வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் புகுந்து வாள்வெட்டு நடத்திய சம்பவம் தொடர்பான காணொலி வெளியாகியுள்ளது.
ஔிப்படக் கலைஞரான பத்ம ராசா என்பவரது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற வாள்வெட்டு குழுவின ரின் அடாவடியே அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்திறங்கியவர்களில் 4 பேர் வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து உள்கதவை காலால் உதைந்தும் வாளால் வெட்டியும் சேதம் விளைவிக் கின்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment