Ads (728x90)

நீண்ட அர­சி­யல் அனு­ப­வம் கொண்­ட­வ­ரும், தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­களை நன்கு உணர்ந்­த­வ­ரு­மான தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை. சேனா­தி­ரா­சாவே வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­ச­ரா­வ­தற்­குத் தகு­தி­யா­ன­வர்.
இவ்­வாறு தெரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன்.

அவ­ரின் கருத்­துக்கு தனது உரை­யில் மறுப்­பே­தும் தெரி­விக்­க­வில்லை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா.

தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் காங்­கே­சன்­து­றைத் தொகுதி அலு­வ­ல­கத் திறப்பு விழா நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

“வடக்கு மாகாண சபை­யின் அடுத்த முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தேர்வு செய்­யப்­பட்டு விட்­டாரா என்று ஊட­கங்­கள் கேட்­கின்­றன. வடக்கு மாகாண சபைக்கு அடுத்த முத­ல­மைச்­ச­ரா­வ­தற்­குத் தகு­தி­யா­ன­வ­ராக கட்­சி­யில் நீண்ட அர­சி­யல் முதிர்ச்­சி­யும், நீண்ட அனு­ப­வ­மும் கொண்ட மாவை.சேனா­தி­ரா­சாவே இருப்­பார். கடந்த மாகாண சபைத் தேர்­த­லில் தனக்­குக் கிடைத்த சந்­தர்ப்­பத்தை விட்­டுக்­கொ­டுத்த அவரே இந்­தப் பத­விக்­குப் பொருத்­த­மா­ன­வ­ராக இருப்­பார். அதற்­கான அழைப்பு முன்­வைக்­கப்­பட்­டால் அவர் அதை ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டும்”- என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கூறி­னார்.

நிகழ்­வில் உரை­யாற்­றில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான மாவை. சேனா­தி­ராசா இந்­தக் கருத்­துக்கு மறுப்­பே­தும் தெரி­விக்­க­வில்லை.

“வடக்கு மாகாண சபை நீண்ட எதிர்­பார்ப்­பில் அமைக்­கப்­பட்­டது. தற்­போது அர­ச­மைப்­புத் தொடர்­பில் எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. தற்­போது முன்­வைக்­கப்­பட்­டுள்ள வரைவு இறு­தி­யா­னது அல்ல. அது தொடர்­பில் மேலும் பல எதிர்­பார்ப்­புக்­கள் உள்­ளன. தற்­போது முன்­வைக்­கப்­ப­டும் அர­ச­மைப்பை நிரா­க­ரித்­தால் மீண்­டும் ஒரு சந்­தர்ப்­பம் கிட்­டுமா என்­பது கேள்­விக்­கு­ரிய விட­யமே”- என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget